சென்னை, மார்ச் 6- கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் மதுரை சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பு சாதி வெறிக்கு கடும் எச்சரிக்கை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், பொறியில் கல்லூரி யில் பயின்று வந்த ஓமலூர் கோகுல்ராஜ் - நாமக்கல் சுவாதி நட்பை விரும்பாத சாதி வெறியர்கள் கும்பலாக சேர்ந்து 23.06.2015 ஆம் தேதி கோகுல்ராஜை கடந்தி சென்று‘ கொடூரமாக கொலை செய்து, உடலை துண்டித்து பள்ளி பாளையம் அருகில் தொடர்வண்டி பாதையில் உடலை வீசி எறிந்துள்ள னர். சட்டத்தின் ஆட்சிக்கும், சமூக வாழ்வுக்கும் பேரதிர்ச்சி அளித்த இந்தக் கொடூர சாதி வெறிக் கும்பலின் கொலை வழக்கில் தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்பு டைய சாட்சிகள் அனைத்தும் பிறழ்சாட்சி யானது பேரவலமாகும். இருப்பினும் வழக்கில் தொடர்புடைய ஆவண சாட்சி யங்களை அறிவியல் கண்ணோட்டத்து டன் கூர்ந்து ஆய்ந்தும், பகுப்பாய்வு செய்தும் மதுரை சிறப்பு நீதிமன்றம் ஆதாரங்கள் அடிப்படையில் குற்றங்களை உறுதி செய்து குற்றவாளி களை அடையாளப்படுத்தி அறிவித் துள்ள மதுரை சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு, சாதி வெறி சக்திகளுக்கு மீண்டும் ஒரு கடும் எச்சரிக்கையாக அமைந்திருக் கிறது. இந்த சிறப்பு வாய்ந்த தீர்ப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கி றது. கோகுல்ராஜூ வின் கொடூர கொலை வழக்கு தொடர்பான ஆவண சாட்சியங்களை மிகப் பொருத்தமாக எடுத்துக் கூறி, குற்றவாளிகள் சட்டத் தின் பிடியில் இருந்து தப்பிவிடக் கூடாது என்பதில் கூடுதல் முனைப்புக் காட்டி வழக்காடியுள்ள அரசின் கூடுதல் சிறப்பு வழக்கறிஞர் ப.பா.மோகனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. இந்த வழக்கில் தொடர்புள்ள ஒருவர் தப்பித்து, தலைமறைவாகி விட்டதாக கூறியிருப்பது காவல்துறையின் பணி மீதான விமர்சனமாகும். அவரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். இந்த வழக்கு சாதிவெறி ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் நிறைவேற்ற வேண்டியதன் அவசி யத்தை திரும்ப, திருப்ப வலியுறுத்து கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்