tamilnadu

img

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

2020 ஆம் ஆண்டுக்குப் பின் விருப்ப ஓய்வு மற்றும் பணியில் இறந்தவர்களின் பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் சென்னை பல்லவன் இல்லம் முன்பு வெள்ளியன்று (ஏப். 29) 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.  மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் மாநில பொதுச்செயலாளர் எம்.துரைப்பாண்டியன் வாழ்த்திப்பேசினார்.  நல அமைப்பின்  தலைவர் எஸ்.கிருஷ்ணன், பொதுச்செயலாளர் கே.கர்சன், பொருளாளர் ஏ.வரதராஜன், துணைப் பொதுச்செயலாளர்கள் பி.செல்வராஜன், ஆர்.தேவராஜ், கே.வீரராகவன் உள்பட மாநிலம் முழுவதிலும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.