சென்னை, ஜூலை 11 - போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொட ரும் என்று தொமுச தலைவர் மு.சண் முகம் எம்.பி., தெரிவித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்த 5வது கட்ட பேச்சுவார்த்தை திங்களன்று (ஜூலை 11) குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக பயிற்சி மையத் தில் நடைபெற்றது. 14வது ஊதிய ஒப் பந்த பேச்சுவார்த்தை 1.9.2019 முதல் அமலாகி இருக்க வேண்டும். கடந்த அதிமுக ஆட்சியில் 2 முறையும், திமுக ஆட்சியில் 2 முறையும் பேச்சு வார்த்தை நடைபெற்றது. கடந்த மே மாதம் 12 ஆம் தேதி கடைசியாக பேச்சுவார்த்தை நடந்தது. இதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலைநிறுத்த எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலை மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மு.சண்முகம் எம்.பி., கி.நட ராசன் (தொமுச), அ.சவுந்தரராசன், கே. ஆறுமுகநயினார் (சிஐடியு) உள்ளிட்டு 66 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து முதன்மை செயலாளர் முனைவர் கே.கோபால், நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், தொழிலாளர் துறை உதவி ஆணையர் லட்சுமிகாந்தன், 8 போக்கு வரத்து கழகங்களின் நிர்வாக இயக்கு னர்கள் கலந்து கொண்டனர்.
விரைந்து முடிக்க முயற்சி
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்து போக்கு வரத்து கழகங்களிலும் ஒரே வழி காட்டல்களை நடைமுறைப்படுத்த நிபு ணர் குழு அமைக்கவும், ஒருசில படி களை உயர்த்தி வழங்கவும் ஒப்புக் கொண்டுள்ளோம். மலைப்பகுதியில் பணியாற்றும் ஊழியர்களுக்கான படியை 1500 ரூபாயிலிருந்து 3000 ரூபா யாக உயர்த்தப்படும. அதிமுக ஆட்சி யில் போராட்டங்களில் ஈடுபட்டதால் ஏற் பட்ட விடுப்பை பணி நாளாக கருதி இழப்பு ஈடுகட்டப்படும் என்றார். ஊழியர் சங்கங்கள் பே மேட்ரிக்ஸ் முறையில் ஊதியம் கோருவது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், அரசு ஊழியர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் உள்ள ஊதிய வித்தியாசத்தை கணக் கிட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். பேச்சுவார்த்தையை விரைந்து முடிக்க ஆவலாக இருக்கிறேன் என்றார்.
மீண்டும் பேச்சுவார்த்தை
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் தொமுச தலைவர் மு.சண்முகம் கூறிய தாவது: “பேச்சுவார்த்தையில் சில கோரிக் கைகள் முழுமை அடையவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு போராட்டங்கள் நடத்தி பலநாள் ஊதி யத்தை இழந்துள்ளோம். அதை முழு மையாக வழங்குவதோடு, சீனியா ரிட்டி மறுக்காமல் பதவி உயர்வு கொடுக்கும் வகையில் ஊதிய உயர்வு அமைய வேண்டும் என்று வலியுறுத்தி னோம். இதை ஓரளவு ஏற்றுக்கொண் டுள்ளார்கள். 2016ம் ஆண்டு ஊதிய உயர்வு ஒப் பந்தத்தின் போது 17 ஊதிய விகி தங்களை 7ஆக குறைத்துவிட்டார்கள். ஊதியத்தில் பல்வேறு மாற்றங்களை செய்து ஊதியத்தில் பெரும் இழப்பை ஏற்படுத்தியதை சரி செய்ய வேண்டும். 5 விழுக்காடு ஊதிய உயர்வு என்று கூறியிருப்பதை உயர்த்தி பெறு வது குறித்து ஆலோசித்து முடி வெடுப்போம். படிகளில் சில மாற் றங்கள் செய்து கொடுத்துள்ளனர். மக ளிர் பேருந்துகளுக்கு வழங்கும் பேட்டா வில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும். ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டு களாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்காமல் உள்ளனர். வருங்கால வைப்பு நிதியிலிருந்து ஒன்றிய அரசு 350 கோடி ரூபாய் தர வேண்டும். 20 ஆண்டுகளாக தராத அந்த தொகை வட்டியுடன் சேர்ந்து 1500 கோடி ரூபா யாக உள்ளது. இந்த பணத்தை பெற்றால் ஓய்வூதியர் பிரச்சனையை தீர்க்க முடியும்.
‘போக்குவரத்து தனியார்மயம் இல்லை’
ஓய்வு பெற்றவர்கள், இறந்தவர் களுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள 900 கோடி ரூபாயை விரைந்து வழங்க வற்புறுத்தினோம். தொழிலா ளர் எண்ணிக்கை, 1.4.2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களின் ஓய் வூதியம் குறித்து பேசியுள்ளோம். பேட்டா கணக்கை பேசி முடிக்க வேண்டி உள் ளது. 15 ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும். இழந்ததை விட்டுக்கொடுக்க முடி யாது. இதுகுறித்து கூட்டுக்குழு சார்பில் முதலமைச்சரை சந்தித்து பேசவும் தயா ராக உள்ளோம். எனவே போராட்ட அறி விப்பு தேவையில்லை. போக்கு வார்த்தை தனியார்மயமாக்கும் பேச் சுக்கே இடமில்லை என்று அமைச்சரே தெளிவுபடுத்திவிட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.