இந்திய சமூக விஞ்ஞானக் கழகம் மற்றும் பச்சையப்பன் கல்லூரி தத்துவத்துறை சார்பில் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை (மே 14) நடைபெற்றது. கேரள மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் வி.கே.ராமச்சந்திரன் தலைமை உரையாற்றினார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை பேராசிரியர் டி.ஜெயராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக துறைத்தலைவர் டாக்டர் வி.சீனிவாசன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஆர்.கஸ்தூரி அறிமுக உரையாற்றினார். சமூக விஞ்ஞானக் கழக செயலாளர் பி.கே.ராஜன் நன்றி கூறினார். துணை பேராசிரியர் ஏ.டி.ரேவதி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.