தமிழ்நாட்டில் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, அதற்கான வாக்குப்பெட்டி புதுதில்லியிருந்து சென்னை விமான நிலையம் வந்தது. சட்டப்பேரவைச் செயலாளரும் தேர்தல் உதவி அலுவலருமான சீனிவாசனிடம் மாநிலத் துணைத் தலைமை தேர்தல் அலுவலர் ஸ்ரீதர் இதனை ஒப்படைத்தார்.