234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
2026 தேர்தலுக்குத் தயாராகும் தேர்தல் ஆணையம்
சென்னை, மே 31 - தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு 2026 ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் இப்போதே தயாராகி விட்டன. தேர்தல் ஆணையமும் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கி உள்ளது. அதனொரு பகுதியாக, தமிழ கத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் பதிவு அதிகாரிகளை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தர விட்டுள்ளது. தற்போது நியமிக்கப் பட்ட அதிகாரிகள் அனைவரும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல், இடமாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். மாவட்ட வருவாய் அலுவலர், கூடுதல் ஆட்சியர், துணை ஆட்சியர், உதவி ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரி கள் நியமிக்கப்பட்டுள்னர். 234 தொகுதிகளுக்குமான அதிகாரி கள் யார், அவர்களின் விவரங்கள் உள்ளிட்டவற்றை தமிழக தேர்தல் அதி காரி அர்ச்சனா பட்நாயக், அரசிதழில் வெளியிட்டுள்ளார்.