மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 9 (இன்று) மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெறுகிறது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் உரையாற்றுகின்றனர். இக்கருத்தரங்கையொட்டி தீக்கதிர் நாளேடு இன்றைய இதழை ‘மாநில உரிமைகள் பாதுகாப்பு சிறப்பிதழாக’ வெளியிடுகிறது. இந்த சிறப்பிதழுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அளித்துள்ள வாழ்த்துச் செய்தி.
கேரளத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 23ஆவது அகில இந்திய மாநாட்டினையொட்டி, ஏப்ரல் 9ஆம் நாள் மாநில உரிமைகள் தொடர்பான கருத்தரங்கினை முன்னிட்டு - தீக்கதிர் நாளேடு “மாநில உரிமை கள் பாதுகாப்புச் சிறப்பிதழ்” வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்த முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் என்ற முறையில் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதல் குரல்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான், தமிழ்நாடு முதலமைச்சராக 1969-இல் முதன்முத லில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. இராஜமன்னார் அவர்கள் தலைமை யில் ஒன்றிய - மாநில உறவுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கை அளிக்க ஆணையம் அமைத்தவர். இந்திய அளவில் - மாநிலங்களுக்கு அதிக அதி காரம் வேண்டும் என்ற குரலை முதலில் இந்த ஆணையத்தின் வாயிலாக எழுப்பியது தமிழ்நாடுதான்! அந்த ஆணையம் “மாநில உரிமைகள்” குறித்து 1971-இல் அளித்த அறிக்கை பற்றி பிரபல அரசியல் சட்ட வல்லுநர் ஏ.ஜி.நூராணி அவர் களே, “an extremely able document” என்று பாராட்டியிருக்கிறார். அந்த அளவிற்கு மாநில உரிமைகளைக் காப்பாற்ற - பாதுகாத்திட தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்ட இயக்கம் - இன்னமும் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக்கழகம்.
இராஜமன்னார் குழு அறிக்கையின் அடிப்படையில் - மாநில சுயாட்சித் தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றிய அன்றைய முதலமைச்சர் முத்தமிழறி ஞர் கலைஞர் அவர்கள், “மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி” என்ற முழக்கத்தை ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் அர்ப்பணித்தவர். சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையை மாநிலங் களுக்குப் பெற்றுத் தந்தது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதை யாரும் மறந்திருக்கவும் முடியாது; இன்றளவும் - நாளையும் மறக்கவும் இயலாது. மாநில அரசுகளைக் “கிள்ளுக்கீரைகள்” போல் நினைத்து கலைத்துக் கொண்டிருந்த ஒன்றிய அரசுக்குக் கடிவாளம் போட்டிட - கடுமை யான நிபந்தனைகள் விதித்து அரசியல் சட்டப்பிரிவு 356-ஐ அவ்வளவு எளிதாகச் செயல்படுத்த முடியாத நிலையை உரு வாக்கிய 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை - அந்தப் பிரிவை அரசியல் சட்டத்திலிருந்து நீக்க ஆணித்தரமாக குரல் கொடுத்து வந்தது திராவிட முன்னேற்றக் கழகமும் - கம்யூனிஸ்ட் கட்சி களும் என்பது வரலாற்று உண்மை.
‘இரட்டைக் கதாநாயகர்கள்!’
“1969 இராஜமன்னார் ஆணையமும்”, மாநில உரிமைகள் பற்றி “1977-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தந்த மேற்குவங்க மெமோரண் டம்” ஆகிய இரண்டும் - மாநில உரிமைகளுக் கான வாதத்தின் இரட்டைக் கதாநாயகர்கள்! இவைதான் பிறகு 1983-இல் ஒன்றிய - மாநில உறவுகள் குறித்து ஆராய “சர்க்காரியா கமிஷன்”, 2000ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தை மறு ஆய்வு செய்ய உருவாக்கப்பட்ட உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடா சலய்யா கமிஷன், 2007இல் மீண்டும் அமைக்கப்பட்ட உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பூஞ்சி கமிணன் எல்லாம் என்றால் மிகையாகாது. ஆகவே கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கும் - மாநிலத்தின் உரிமைகளுக் கும் திராவிட முன்னேற்றக் கழகமும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியும் இந்தி யாவிற்கே வழிகாட்டின. அன்று மட்டுமல்ல - இன்றும்தான் - ஏன் என்றும்தான் என்பதைப் பறை சாற்றும் விதத்தில்தான் இப்போது கேரளா மாநில முதலமைச்சராக மாண்புமிகு பினராயி விஜயன் அவர்கள் ஆட்சியிலிருக்கும் நேரத்தில் மாநில உரிமைகள் குறித்த கருத்தரங்கம் நடை பெறுகிறது. இங்கு தமிழ்நாட்டில் நான் முத லமைச்சராக பொறுப்பேற்றுள்ள நேரத்தில் - தீக்கதிர் நாளேடு “மாநில உரிமைகள்” குறித்து சிறப்பிதழ் வெளியிட்டுள்ளது. மாநில உரிமைகளுக்காக - மாநிலங் களுக்காக அதிக அதிகாரம், வேண்டும் என்ற திராவிட முன்னேற்றக்கழகம் - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இரண்டும், “இரட்டைக் குழல் துப்பாக்கி” போல் எழுப்பிய குரல் - இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் - பல்வேறு மாநிலங்களிலும் எதிரொலிப்பது இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு வலுசேர்க்கிறது.
பாஜக அரசின் அதிகார ஆணவம்
ஒன்றிய பாஜக தலைமையிலான அரசு “அதிகார ஆணவத்தின்” உச்சிக்கே சென்று தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. மாநி லங்களின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது. நிதியுரிமை, மாநில சட்ட மன்றங்களின் சட்டம் இயற்றும் உரிமை, நம்மூரில் உள்ள கூட்டுறவு சங்கத்தை நிர்வகிக்கும் உரிமை என எல்லாவற்றிலும் ஜனநாயக விரோதமாக கை வைக்கிறது. அரசியல் சட்டம் தந்துள்ள “மாநிலப் பட்டியலை” புறக்கணித்திடவும் - “ஒத்திசை வுப் பட்டியலில்” உள்ள அனைத்து அதிகாரங் களும் தங்களுக்கு ஒட்டுமொத்தமாகக் குத்த கைக்கு விட்டுவிட்டது போலவும் செயல்படும் ஒன்றிய அரசை பாஜக வடிவில் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் சட்டத்தை மதிக்காமல் அப்பட்டமாகச் செயல் படும் ஓர் அரசை காண்கிறோம். நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்குரிய பொருளாக்கும் ஓர் ஒன்றிய அரசு செயல்படுவதை காண்கிறோம். நியமிக்கப்பட்ட - அதுவும் பெரும்பாலும் பாஜகவின் அரசியலில் ஊறிப் போன ஆளுநர்களை வைத்து - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்களின் அன்றாட நிர்வாகப் பணிகளில் தலையிட்டு தடை ஏற்படுத்துகிறது ஒன்றிய பாஜக அரசு. அரசியல் வாதிகளாக ஆளுநர்கள் மாறுவது மட்டு மின்றி - ஆளுநர் மாளிகைகளும் பாஜக என்ற அரசியல் கட்சியின் தலைமை அலுவலகங்கள் போல் மாறும் அவல நிலைமை இப்போது இந்தி யாவில் - குறிப்பாக பாஜக ஆளாத மாநிலங் களில் ஏற்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கும் ஒன்றிய - மாநில உறவுகளுக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக-ஏன் ஆபத்தாகவே மாறி வருகிறது.
ஆளுநர் பதவி தேவையா?
அதனால்தான் - இன்று பாஜக ஆளும் மாநி லங்களில் எல்லாம் - “ஆட்டுக்குத் தாடி தேவை யற்றது போல், நாட்டுக்கு ஆளுநர் பதவி தேவையா?” என்று திமுக எழுப்பிய முழக்கம் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கியுள்ளது. அரசியல் சட்டத்தை உருவாக்கிய மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள், “நல்ல அரசியல் சட்டமாக இருந்தாலும் அதைச் செயல்படுத்த வருபவர்கள் கெட்டவர்களாக இருந்தால் அரசியல் சட்டமும் கெட்டுப் போகும்” (However good a constitution may be, it is sure to turn out bad because those who are called to work it happen to be a bad lot) என்றார். இன்றைக்கு பாஜக அல்லாத மாநிலங் களில் உள்ள ஆளுநர்களின் செயல்பாடுகளும், ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைகள் பறிப்பும் - மாநிலங்களைச் சிறுமைப்படுத்தும் போக்கும் அதைத்தான் நினைவுபடுத்துகின்றன. அரசியல் சட்டம் தந்துள்ள - கூட்டாட்சித் தத்துவத்தை, “ஒன்றிய அரசு - மாநில அரசு” என்று பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ள அதிகா ரங்களை மதிக்காமல் - “ஒரே” என்ற ஒற்றைச் சொல்லை எல்லா மட்டத்திலும் ஏற்படுத்தி - இந்திய ஜனநாயகத்தை எதேச்சதிகாரத்தில் தள்ளிவிட ஒன்றிய பாஜக அரசு முயல்கிறது; தீவிரமாக முயல்கிறது. அதைத் தீக்கதிர் போன்ற நாளேட்டின் இந்தச் சிறப்பிதழ் ஒன்றிய பாஜக அரசின் “சர்வாதி கார இருட்டை” போக்கும் கைவிளக்காக மாறட்டும் என்றும், மீண்டும் மாநில உரிமைகளுக் கான குரல் தமிழ்நாட்டிலிருந்தும் - கேரளாவி லிருந்தும் - ஏன், அனைத்து மாநிலங்களில் இருந்தும் “தில்லியை நோக்கி” வலுவாக ஒலிக்கட்டும் என்று வாழ்த்துகிறேன்.
அன்புடன்
மு.க.ஸ்டாலின்