tamilnadu

img

தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத் தேர்தலில் ஜனநாயக அணி மகத்தான வெற்றி

சென்னை, ஜூலை 17- தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலு வலர் சங்கத் தேர்தலில் ஜனநாயக அணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் அமைச்சகத்தின், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் தமிழகத்தில் 102 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.  இந்நிலையில் தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, பயிற்சிப் பிரிவில் பணி யாற்றும் அலுவலர்களுக்கான தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர்  சங்கத்தின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான மாநில நிர்வாகிகள் தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடை பெற்றது. இதில் ஜனநாயக அணி, எம்.ஆர்.ஏ. அணி என இரண்டு அணிகள் போட்டியிட்டன. மாநிலம் முழுவதும் நடைபெற்ற தேர்தலில் மு.சீனிவாசன் தலைமை யில் போட்டியிட்ட ஜனநாயக அணி மகத்தான வெற்றி பெற்றது. மாநிலத் தலைவராக எம்.சீனிவாசன், பொதுச் செயலாளராக என்.ரமேஷ், பொரு ளாளராக என்.திருநாவுக்கரசு, செய லாளராக சி.அஜெய்ராஜ், அமைப்புச் செயலாளராக கே.கார்த்திகேயன், துணைத் தலைவராக பி.நடராஜன், ஆர்.அமேரசன், மதுரை மண்டலச் செய லாளராக கே.முத்துவேல், நெல்லை மண்டலச் செயலாளராக டி.சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதையடுத்து வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கான பதவியேற்பு விழா மாநில தேர்தல் ஆணையர் கே.மோகன்தாஸ் தலைமையில் வட சென்னையில் ஜூலை 15 திங்க ளன்று நடைபெற்றது. தேர்தல் ஆணையர் வெற்றி பெற்ற அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டி ஐடிஐ முதல்வர் என்.சுப்பிரமணியன், வட சென்னை ஐடிஐ துணை இயக்குநர்  டி.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சா.டேனியல் ஜெயசிங், மாநில துணைத் தலை வர் கோ.பழனியம்மாள், வட சென்னை மாவட்டச் செயலாளர் எம்.அந்தோணிசாமி, முன்னாள் மாநில துணைத் தலைவர் எம்.பஞ்சம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். முன்னதாக கிளை செயலாளர் எஸ்.சோலைராஜ் வரவேற்றார். பொதுச்செயலாளர் என்.ரமேஷ் நன்றி கூறினார். தீர்மானங்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையில் பயிற்சி பிரிவில் காலியாக உள்ள சுமார் 1200க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப அலுவலர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும், கடந்த 8 ஆண்டு களாக நிரப்பப்படாமல் உள்ள பணிமனை பண்டக உதவியாளர்கள் மற்றும் இளநிலை பயிற்சி அலு வலர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.  இத்துறையில் பயிற்சி பெற்று இத்துறையிலேயே பணியாற்றி வரும் சான்றிதழ் தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.