சென்னை,ஜன.5- ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரி விக்கவில்லை என்றும் ஆளுருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் சிந்தனை செல்வன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜன.5 அன்று காலை 10 மணிக்கு கூடியது. ஆளுநர் ரவி தனது உரையை வாசிக்க துவங்கியதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் சிந்தனை செல்வன் பேரவைத் தலைவரின் அனுமதியின்றி பேசினார். அப்போது, “ நீட் மசோ தாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பா மல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை” கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகியோரும் வெளிநடப்பு செய்த னர். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,“ தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்ட நீட் எதிர்ப்பு தீர்மானத்தை அனுப்பி வைக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். இது தமிழக மக்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய துரோகம்” என்றார். தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்கத்தவறிய ஆளுநர், உரையை வாசிப்பதற்கு எந்த உரிமையும் இல்லை. நாங்கள் ஆளுநர் உரையை மதிக்கிறோம். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் ஆளுநரை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளோம்” என்றார்.