வேலூர்,ஏப்.17- வேலூர் விஐடியில் பி.டெக் பட்டப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஏப். 17 அன்று துவங்கியது. வருகிற 22 ஆம் தேதி வரை வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் மொத்தமாக 125 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு கணினி முறையில் நடைபெறுகிறது. இதன் முடிவுகள் ஏப்.26 அன்று, www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளி யிடப்படுகிறது. மேலும், அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு துவங்குகிறது. விஐடி வேலூர் வளாகத்திலுள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் நடை பெற்ற நுழைவுத் தேர்வை விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் பார்வையிட் டார். அதேபோல், விஐடி துணைத் தலை வர் சங்கர் விசுவநாதன் பெங்களூரு மையத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வை பார்வையிட்டார்.
கல்விக் கட்டண சலுகைகள்
ஒன்றிய, மாநில கல்வி வாரியம் நடத்தும் 12 ஆம் வகுப்பு தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெறும் மாணவர்களுக்கு விஐடி பல்கலைக்கழ கத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பி.டெக் படிப்புக்கு 4 ஆண்டு காலமும் 100 விழுக்காடு கட்டண சலுகை வழங்குகிறது. அத்துடன், விஐடி நுழைவுத் தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவர்களுக்கு 75 விழுக்காடு கட்டண சலுகையும் 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவர்களுக்கு 50 விழுக்காடு படிப்பு கட்டண சலுகையும் 101 முதல் 1000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாண வர்களுக்கு 25 விழுக்காடு கட்டண சலுகை வழங்குகிறது. தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்திலுள்ள கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்ப மாணவர்கள் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயி லும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் 12 ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெறும் மாணவர்களுக்கு 100 விழுக்காடு கட்டண சலுகையுடன் உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழ கத்தில் இலவச சேர்க்கை வழங்குகிறது.