சென்னை, ஜூன் 12 - ஹரிவராசனம் பாடலின் நூற்றா ண்டு நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பேசிய பேச்சு முற்றிலும் அர சியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரிவராசனம் பாடல் இயற்றப் பட்டு நூறாண்டுகள் ஆனதையொட்டி சபரிமலை ஐயப்பா சேவா சங்கம் என்ற பெயரில் சென்னையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முற்றி லும் ஆர்எஸ்எஸ் மதவாத சிந்தனையை பரப்புவதாக அமைந் தது. இதற்கு தமிழக அரசியல் அரங் கில் கடும்கண்டனம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியிருப்ப தாவது: தமிழக ஆளுநரின் சனாதனம் பற்றிய உரை மொத்தமும் அபத்தம். அரசமைப்புச் சட்டத்தை அமலாக்கு வதும், நவீன இந்தியாவை கட்ட மைப்பதும்தான் அரசின் நோக்கமாக இருக்க முடியும். சனாதனம் என்ற பெயரில் பிறப்பின் அடிப்படையில் பாகுபாட்டை நியாயப்படுத்துவது, வரலாற்றை திரித்து வன்முறை உருவாக்குவதுமான போக்கில் விஷக் கருத்துக்களை விதைப்பது, பாஜகவின் அரசியல் திட்டமே அன்றி, அரசமைப்புச் சட்ட விழுமியம் அல்ல. ஒன்றிய அரசின் முகவராகவே செயல்படும் ஆளுநர் தனது அரசியல் பேச்சுக்கு அனைத்து மேடைகளை யும் பயன்படுத்தி வருகிறார். இது வன்மையான கண்டனத்துக்குரியது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.