விருதுநகர், மார்ச் 25 - விருதுநகரில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபி சிஐடி விசாரணை தொடங்கி யுள்ளது. இளம்பெண் பாலி யல் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந் தார். 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகா ரத்தில் 4 பள்ளி மாணவர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் பாண்டியன் நகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் தாயாருடன் வசித்து வருகிறார். அவ ருக்கும் அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஹரிஹரன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அந்தப் பெண்ணுடன் பாலி யல் உறவு வைத்து அதை வீடியோவாக பதிவு செய்துள் ளார்.
இதனிடையே அந்த இளம்பெண் தன்னை திரு மணம் செய்துகொள்ளுமாறு ஹரிஹரனை வற்புறுத்தியுள் ளார். ஆனால் ஹரிஹரன் திருமணம் செய்ய மறுத்துள் ளார். இதை அடுத்து அந்த இளம்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப் பட்டன. இதற்கிடையில் ஹரி ஹரன், ஏற்கனவே பதிவு செய்த வீடியோ காட்சிகளை வைத்து மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து வந்துள் ளார். பிறகு அந்த வீடியோ வை ஹரிஹரன் தனது நண் பர்களுக்கு சமூக ஊடகம் மூலம் அனுப்பி வைத்துள் ளார்.
ஹரிஹரனின் நண்பர் களும் அந்த வீடியோவை இளம் பெண்ணிடம் காட்டி மிரட்டி அவருடன் பாலியல் உறவு வைத்ததும், ஹரி ஹரன் தொடர்ந்து இளம் பெண்ணை தொந்தரவு செய்து வந்ததும் தெரிய வந்துள்ளது. விசாரணையில் கிடைத்த தகவல்கள் மற்றும் தடயங் களின் அடிப்படையில் இதில் ஈடுபட்டது 8 குற்றவாளிகள் என தெரியவந்துள்ளது. இதில் ஹரிஹரன், மாட சாமி, பிரவீன், ஜுனைத் அக மது ஆகியோர் கைது செய்யப் பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப் பட்டனர். நான்கு பேர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்பதால் இராமநாதபுரம் அரசு கூர்நோக்கு இல்லத் துக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபி சிஐடி-க்கு மாற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டி ருந்தார். இதன்படி இந்த வழக்குகளுக்கான கோப்பு கள் விசாரணை அதிகாரி சிபி சிஐடி அதிகாரி வினோதினி யிடம் ஒப்படைத்தார். வெள்ளி காலை சிபிசிஐடி எஸ்பி விருதுநகர் அலுவல கத்திற்கு சென்று 4 பள்ளி மாணவர்கள் தவிர மீதமுள்ள குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரணையைத் துவக்கினார்.