tamilnadu

img

விருதுநகர் சந்தை: உருட்டு உளுந்து, துவரம் பருப்பு விலை உயர்வு

விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வாரத் திற்கான விலைப் பட்டியல் விபரம்: கடலை எண்ணெய் 15 கிலோ கடந்த வாரம் ரூ.3ஆயிரம் என விற்கப்  பட்டது. இந்த வாரம் டின் ஒன்றுக்கு  ரூ.20 குறைந்துள்ளது. எனவே, ரூ. 2980 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. பாமாயில் கடந்த வாரம் 15 கிலோ ரூ. 1335 என விற்கப்பட்ட நிலையில் ரூ.5 மட்டும் குறைந்து, தற்போது ரூ.1330க்கு விற்கப்படுகிறது. குண்டூர் வத்தல் 100 கிலோ ஏ.சி  வகை ரூ.24 ஆயிரம் முதல் 26 ஆயி ரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம்  குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்துள்ளது. எனவே, ரூ.23  ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்ப னையாகிறது. துவரம் பருப்பு நயம் புதுஸ் லயன்  வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.17 ஆயிரம் என விற்கப்பட்டது.

இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.17,200 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு நாடு வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ. 12,300 என விற்கப்பட்டது. இந்நிலை யில் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 வரை  உயர்ந்துள்ளது. எனவே, குவிண்டால்  ரூ.12,500-க்கு விற்பனையாகிறது. பாசிப்பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,600க்கு விற்கப்பட்டது. இந்த வாரம் சந்தையில் வரத்து அதி கரிப்பு காரணமாக ரூ.300 குறைந் துள்ளது. எனவே, மூட்டை ஒன்று ரூ.10,300-க்கு விற்கப்படுகிறது. எள் புண்ணாக்கு 50 கிலோ கடந்த  வாரம் ரூ.2550 என விற்கப்பட்ட நிலை யில் ரூ.100 அதிகரித்து தற்போது ரூ. 2650-க்கு விற்கப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் இக்காலத்தில் பருப்பு வகை களின் விலை தொடர்ந்து அதிகரித்து  வருகிறது. இதனால், பொதுமக்கள் பண்டிகைக்கு தேவையான பொருட்  களை எப்படி செலவு செய்து வாங்கு வது என திகைப்பில் உள்ளனர். எனவே, தமிழக அரசானது, தீபா வளி பண்டிகையையொட்டி நியாய விலைக் கடைகளில் எண்ணெய், பருப்பு வகைகள் மற்றும் மளிகை பொருட்களை இலவசமாக வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.