tamilnadu

பல்கலைக்கழகத்திலும் குண்டுவெடிப்பு: தீக்கிரையானது பள்ளி

கடந்த ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய் டெய் இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க பரிசீலிக்குமாறு உத்தரவிட்டது. இதற்கு குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே  மாதம் கடைசி வாரத்தில் போராட் டம் நடத்தினர். இதையடுத்து மெய்டெய் மக்களும் போராட்டத்  தில் ஈடுபட்டனர். இந்தப் போராட் டங்களின் போது அரங்கேறிய வன்முறை, தற்பொழுது வரை 10 மாதங்களாக இடைநில்லாமல் நீடித்து மணிப்பூர் மாநிலமே பற்றி எரிந்து வருகிறது. தங்கள் தீர்ப்பால்தான் மணிப்  பூர் மாநிலம் இந்த நிலைமைக்கு ஆளாகியுள்ளது என்று கூறி, மணிப்பூர் உயர்நீதிமன்றம் மெய் டெய் மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க உத்தரவிட்ட தீர்ப்பை திரும்பப் பெற்றது. இத னால் மணிப்பூரில் வன்முறை சம்ப வங்கள் குறையும் என எதிர்பார்க்  கப்பட்ட நிலையில், வெள்ளி யன்று நள்ளிரவு இம்பாலில் பல்க லைக்கழகத்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி யது. இச்சம்பவத்தில் 24 வயது  ஒயினம் கெனேகி என்ற மாணவர்  உயிரிழந்தார். மேலும் ஒரு மாண வர் கவலைக்கிடமான நிலையில்  மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.  பள்ளிக்கும் தீ வைப்பு வெள்ளியன்று மதியம் 12.45 மணியளவில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் மர்மநபர்கள் ஒரு பள்ளியின் நிர்வாகப் பிரிவை  அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி, பின்னர் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தீ வைத்து எரித்தனர். மேலும் இதே பகுதி யில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்க ளையும் மர்மநபர்கள் தீ வைத்துள் ளனர்.   உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின்பு மணிப்பூரில் இயல்புநிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வன்முறை சம்பவங் கள் குறையாமல் 10 சதவீத அள வில் மீண்டும் அதிகரித்து வருவ தால் பாஜக ஆளும் மணிப்பூர் வன்முறை பதற்ற பூமியாகவே தொடர்ந்து காட்சி அளித்து வரு கிறது.