tamilnadu

விழுப்புரம், வேலூர், மதுரை முக்கிய செய்திகள்

போதைபொருட்களின் கூடாரமாக திண்டிவனம் நகரம்
விழுப்புரம், ஆக. 25-விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் விஐபி அந்தஸ்து பெற்ற நகரங்களில் ஒன்று. மேலும் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடக, தென் மாவட்டங்களை இணைக்கும் இணைப்பு பாலமாக திகழும் நகரமும் கூட. அதனால் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் இருக்கும் நகரமாகும். மதுரையை போல் வட மாவட்டத்தில் இந்த திண்டிவனம் நகரத்தை தூங்கா நகரமென்றே சொல்லலாம். ஆனால் சமீபகாலமாக திண்டிவனம் நகரம் பல்வேறு சமூக குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இங்கு அதிகரித்து வரும் கஞ்சா விற்பனை, போதை ஊசி, கள்ளச்சாரா யம், மற்றும் அனுமதியற்ற போலி பார்களில் அதிகாலை முதலே அமோக மது விற்பனை ஆகியவற்றை தடுக்காமல் ரவுடிகளின் சமூக விரோத செயல்களை காவல் துறையினர் கண்டுகொள்வதில்லை.  மேலும் இங்கு தடை செய்யப்பட்டுள்ள பாக்கெட் சாராயம் கிடங்கல் மற்றும் திண்டிவனம் நகரத்தில் பல்வேறு பகுதிகளில் அமோகமாக விற்பனை செய்யப்படு கிறது. குறிப்பாக திண்டிவனம் மேம்பாலத்தின் கீழே இரவு நேரங்களில்  கஞ்சா விற்பனை கொடி கட்டி பறக்கிறது.  இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்போன் கோபுரம்: பொதுமக்கள் எதிர்ப்பு
வேலூர், ஆக. 25-காட்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காட்பாடி அருகே கல்புதூர் ராஜலிங்கநகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அந்நிறுவனம் செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி வைத்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த இடத்தில் மீண்டும் கோபுரம் அமைக்க அதிகாரிகள் வந்தனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். குடியிருப்புகள் நிறைந்த இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைத்தால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, செல்போன் கோபுரம் அமைக்கக் கூடாது என்று வாதிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
 

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு
மதுரை, ஆக.25- மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரி யர் ஒருவருக்கு கட்டாய பணி ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் திரைப்படம் மற்றும் மின்னணு ஊடக ஆய்வு மையத்தில் பயிலும் ஆய்வு மாணவி, தன்னுடைய ஆய்வு வழிகாட்டியான பேரா சிரியர் கர்ண மகாராஜன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து பல்கலைக்கழகப் பதிவாளரிடம் கடந்த டிசம்பர் மாதம் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் விசா ரணை நடத்தப்பட்டது. அறிக்கையில் பேராசிரியர் கர்ண மகாராஜன் பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக மாணவி அளித்த புகார் உண்மை என்று குறிப்பிடப் பட்டிருந்தது. இதையடுத்து காமராஜர் பல்கலைக்கழ கத்தில் சிறப்பு சிண்டிகேட் கூட்டம் வியாழக்கிழமை நடை பெற்றது. இதில் துணைவேந்தர் மு.கிருஷ்ணன், சிண்டி கேட் உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்த பாலியல் புகார் உறுதி செய்யப் பட்டதால் பேராசிரியர் கர்ண மகாராஜனை பணியில் இருந்து கட்டாய ஓய்வுக்கு அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டது.