tamilnadu

img

வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் மறைவு: தலைவர்கள் இரங்கல்

சென்னை, அக்.10- பிரபல வில்லிசை கலைஞர் சுப்பு ஆறுமுகம் வயது மூப்பு  காரணமாக சென்னை கே.கே.நகரில் உள்ள தனது இல்லத்தில் திங்களன்று (அக். 10) காலமானார். அவருக்கு வயது 94. கடந்த 1928 ஆம் ஆண்டு திரு நெல்வேலி மாவட்டம் சத்திர புதுக்குளத்தில் பிறந்தவர் சுப்பு ஆறுமுகம். தனது வில்லுப் பாட்டின் மூலம் சுதந்திர போராட்ட காலத்தில் மக்களிடையே தேச பக்தியை வளர்த்து வந்தார். கடந்த  40 வருடங்களாக வில்லுப்பாட்டு நடத்தி வந்தார். பள்ளிகள், கல்லூரி கள் மற்றும் பொது இடங்களில் தன் வில்லுப்பாட்டினால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். 1975 ஆம் ஆண்டு கலைமா மணி விருதும், சங்கீத நாடக அகாடமி விருதினையும் பெற்றார். 2021 ஆம் வருடம் ஒன்றிய அரசு  பத்மஸ்ரீ விருதும் வழங்கி கவுரவித் தது. முதல்வர் வில்லிசைப் பாட்டுக் கலைஞர்  சுப்பு ஆறுமுகம் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற வில்லி சைப் பாட்டுக் கலைஞர் ‘பத்மஸ்ரீ’ சுப்பு ஆறுமுகம் (93) வயது மூப்பின்  காரணமாக மறைவுற்றார் என்றறிந்து வேதனையடைகிறேன். இளமைக்காலம் முதலே தமிழ் மண்ணின் மரபார்ந்த கலையான வில்லுப்பாட்டில் தேர்ச்சி பெற்று “வில்லிசை வேந்தர்”எனப் போற்றும் நிலைக்கு உயர்ந்தவர் சுப்பு ஆறுமுகம். கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாகேஷ் ஆகியோரின் திரைப்படங்களிலும் தனது பங்களிப்பை அவர் செய் துள்ளார். மூத்த கலைஞரான சுப்பு ஆறு முகத்தின் இழப்பால் துயரில்  இருக்கும் அவரது குடும்பத் தாருக்கும் உறவினர்களுக்கும் கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலை யும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். திராவிடக்கழகத்தலைவர் கி.வீரமணி, வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.