திருவனந்தபுரம், நவ.4- கேரளீயம் கருத்தரங்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, கேரளீயம் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண் டாம் என்று கட்சி கூறியதாக தனது உரையில் குறிப்பிட்ட மணிசங்கர் அய்யர் தான் அரசியல் குறித்து விவாதிக்கும் கருத்தரங்கில் பங்கேற்கவில்லை எனவும், அதிகாரப் பரவலாக்கம் குறித்த கருத்தரங்கிலேயே பங்கேற்பதாகவும் தெரிவித்தார். பஞ்சாயத்து ராஜ் சட்டம் ராஜீவ் காந்தியால் அமல்படுத்தப்பட்டது, ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த கருத்தரங்கில் பங்கேற்றதாகவும் கூறினார். மேலும், பஞ்சாயத்து ராஜ்ஜின் அடிப்படை நோக்கம் தீவிர வறுமையை ஒழிப்பதாகும். பஞ்சாயத்து ராஜ் வெற்றி கேரள மக்களுடையது. இந்த வெற்றி கேரளாவில் யூடிஎப் மற்றும் எல்டிஎப் ஆகிய இரு கட்சிகளுக்கும் சொந்த மானது. அதை காங்கிரஸ் புரிந்து கொள்ளும் என்றும், கருத்தரங்கில் பங்கேற்பதற்கு எதிராக தன்மீது எந்த நடவடிக்கையும் இருக்காது என்றும் அவர் கூறினார்.