திருவண்ணாமலை, ஜூன் 13- திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகம் சார்பிலும், இந்திய தேசிய கூட்ட மைப்பு கூட்டுறவு இணையம் சார்பிலும் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் செயல்படுகின்றன. இந்த கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடமிருந்து 1 மூட்டை நெல் கொள் முதலுக்கு 60 ரூபாய் லஞ்சம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. இந்த பிரச்சனை குறித்து விவ சாயிகள் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகளிடம் முறையிட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள், கேட்டவாரம்பாளையம் பகுதியில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சப் பணத்தை கட்டாயப்படுத்தி வாங்குதாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து, பிரச்சனைக்குரிய கேட்டவரம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனாலும், விவசாயிகளிடம் லஞ்சம் பெறுவது தொடர்ந்தது. இந்த நிலையில், திங்களன்று (ஜூன் 12) திருவண்ணாமலை - வேலூர் சாலையிலுள்ள தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் முற்று கையிட்டனர். இந்த போராட்டம் செவ்வாயன்றும் (ஜூன் 13) தொடர்ந்தது. இந்த போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன் கூறியதாவது:- ஒரு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 7 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. இம் மாட்டத்தில் சுமார் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையம் இருக்கிறது.
தினசரி 1 கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்படு கிறது. கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் பெறப்பட்டது குறித்து உரிய ஆதாரங்களை அளித்துள்ளோம். எனவே லஞ்ச ஒழிப்புத்துறையும், தமிழ்நாடு அரசும் உடனடியாக தலை யிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கிடையே நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தின் மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய விசா ரணை நடத்தப்பட்டு,நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவ சாயிகளிடம் லஞ்சம் பெற்ற 3 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்ட னர். விவசாயிகளிடம் பணம் பெறப் பட்டது தொடர்பாக, கடலாடி காவல் நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் வீரளூர் ஏகாம்பரம், சீனந்தல் பெருமாள், பட்டியந்தல் ரோஜாவதி, தென்மாதி மங்கலம் கார்த்திகேயன் உள்ளிட்ட 10 பேரிடம் லஞ்சமாக பெறப்பட்ட ரூ.38 ஆயிரத்து 320ஐ விவசாயிகள் சங்க நிர்வாகிகளிடம், நெல் கொள்முதல் நிலைய ஊழியர்கள் திருப்பிக் கொடுத்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனை வரும் கலைந்து சென்றனர். இதில் நிர்வாகிகள் டி.கே.வெங்க டேசன், எஸ்.பலராமன், உதயகுமார், எல்.சிவக்குமார், சாமிக்கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ் ராமதாஸ், வழக்கறிஞர் எஸ்.அபிராமன், ராம சாமி உட்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.