கண்ணூர், ஏப்.5- வீரத்தின் விளைநிலமாய் தியாக பூமியான கண்ணூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் தொடக்கத்தை முன்னறிவிக்கும் விதமாக உதிரச் செங்கொடி செவ்வாயன்று மாலை விண்ணதிரும் முழக்கங்களுக் கிடையே பட்டொளி வீசிப் பறக்கத் தொடங்கியது. பாஜகவின் கொடூரமான ஆட்சிக்கு முடிவு கட்டும் அர சியல் முடிவுகளுக்கு களமாக விளங்கும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் 23 ஆவது அகில இந்திய மாநாட்டை நாடே உற்று நோக்குகிறது. இந்தியாவில் கம்யூ னிஸ்ட் கட்சியின் வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பை வழங்கிய கண்ணூர், கட்சி மாநாட்டை மறக்க முடியாததாக மாற்றத் தயாராகி உள்ளது. செவ்வாயன்று (ஏப்.5) மாலை ஏ.கே.ஜி.நகரில் (ஜவஹர் ஸ்டேடியம்) வரவேற்புக்குழு தலைவரும், முதல்வருமான பினராயி விஜயன் செங்கொடி ஏற்றினார்.
மக்கள் தலைவன் ஈ.கே.நாய னார் பெயரில் உள்ள கல்விக் கூடத்தில் தனிச்சிறப்புடன் வடி வமைக்கப்பட்ட இடத்தில் பிரதி நிதிகள் மாநாடு புதனன்று (ஏப்.6) காலை தொடங்கும். கட்சியின் மாநாட்டை பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தொடங்கி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து. ராஜா வாழ்த்துரை வழங்குகிறார். மாநாட்டில் பிரதிநிதிகள், பார்வையாளர்கள், மத்தியக் குழு உறுப்பினர்கள் என 815 பேர் கலந்து கொள்கின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரதிநிதிகளும் தலைவர்களும் வந்து சேருகின்றனர். குஜராத் அணி திங்களன்று காலை கண்ணூர் வந்தடைந்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் உள்ள பிரதிநிதிகள் செவ்வா யன்று காலை வந்தனர். ரத்தச் சிவப்பேறிய கொடிகள், உலக, இந்திய கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆசான்களின் உருவப்படங்கள் நிறைந்த கட்சி மாநாட்டின் கள மாக கண்ணூர் நகரம் மாறியுள் ளது. பொதுமாநாட்டு நகரில் கையூர் போராட்டக் களத்தில் இருந்து புறப்பட்ட கொடிக் கம்பம் புதனன்று வந்தடையும். புன்ன புரா - வயலார் மண்ணில் இருந்து கொண்டுவரப்பட்ட செங்கொடி அதில் உயரும்.
கொடிக்கம்பம் புறப்பாடு
மத்தியக் குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி தலைமையிலானகொடிமர பயணத்தை மத்தியக்குழு உறுப்பினர் அமைச்சர் எம்.வி.கோவிந் தன் தொடங்கி வைத்தார். மத்திய குழு உறுப்பினர் பி.கருணாகரன் கொடி ககம்பத்தை பி.கே.ஸ்ரீமதியிடம் ஒப்ப டைத்தார். பயண மேலாளர் கே.பி. சதீஷ் சந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் பொறுப்பேற்றனர். நிகழ்ச்சிக்கு காசர் கோடு மாவட்டச் செயலர் எம்.வி.பால கிருஷ்ணன் தலைமை வகித்தார். எம். ராஜகோபாலன் எம்எல்ஏ வரவேற் றார். செவ்வாயன்று காசர்கோடு மற்றும் கண்ணூர் மாவட்டங்களில் செந்தொண்டர் அணிவகுப்புடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.சுவராஜ் தலைமையிலான கொடி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை காலை கண்ணூர் மாவட்டத்தில் நுழைந்தது.
பொதுச் செயலாளர் வருகை
சிபிஎம் 23ஆவது அகில இந்திய மாநாட்டிற்கு வந்த கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை கண்ணூர் விமான நிலையத்தில் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெய ராஜன் வரவேற்றார். மத்தியக் குழு உறுப்பினர் கே.கே.சைலஜா உள் ளிட்டோர் உடனிருந்தனர்.