சென்னை,மார்ச் 31- ஆம்பூர் அருகே அதிகமாக பெண் தொழி லாளர்களை ஏற்றிச் சென்ற வேன், விபத்தில் சிக்கிய தில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரத்தில் தனியார் தோல் தொழிற் சாலை ஒன்று இயங்கி வரு கிறது. இந்த தொழிற்சாலை யில் ஏராளமான பெண் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஆம்பூர் வாணியம்பாடி சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பெண் தொழி லாளர்களை வேன் மூலம் வேலைக்கு அழைத்து வருகின்றனர். வாணியம்பாடி பகுதி யில் உள்ள கிராமங்களில் பெண் தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை வேன் ஒன்று தொழிற் சாலைக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 25-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இருந்த னர். ஆம்பூர் அடுத்த சோலூர் மேம்பாலம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ் சாலையில் சென்றபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வேன் தறிகெட்டு ஓடியது. சாலை நடுவில் உள்ள தடுப்புகளில் மோதி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்தது. அந்த நேரத்தில் சென்னை யில் இருந்து பெங்களூர் நோக்கி சிமெண்ட் ஏற்றி வந்த லாரி மீது வேன் மோதி யது. இதில் வேன் முழுவதும் நொறுங்கியது. இந்த விபத்தில் ஓட்டுநர் ராமன் மற்றும் 3 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே இறந்த னர். மேலும் பலர் காய மடைந்தனர். இடிபாடுக ளுக்குள் சிக்கிய பெண் தொழிலாளர்கள் அலறி கூச்சலிட்டனர். இந்த விபத்து காரணமாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்பட்டது. அங்கிருந்த பொதுமக்கள் வேனில் சிக்கிய பெண் தொழிலாளர் களை மீட்டு முதலுதவி அளித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வரு கின்றனர்.