ரூ. 80 கோடியில் புதுப்பொலிவு பெற்ற வள்ளுவர் கோட்டம்!
முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை, ஜூன் 21 - சென்னையில் அமைந்துள்ள வள்ளுவர் கோட்டம் கடந்த 10 ஆண்டு களாக பராமரிக்கப்படாமல் இருந்த நிலையில், அதனை ரூ. 80 கோடியில் புனரமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அத னடிப்படையில், தற்போது புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்நிலையில், புதுப்பொலிவு பெற்றுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழ மை (ஜூன் 21) திறந்து வைத்தார். நவீன கலையரங்கம் - ஆய்வரங்கம், நூலகம் புதுப்பிக்கப்பட்ட வள்ளுவா் கோட்டத்தில், தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்து வதற்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப் பட்டு 20,000 சதுர அடி பரப்பில் 1,548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் கலையரங்கம் மேம் படுத்தப்பட்டுள்ளன. முன்னாள் முதல்வா் கருணாநிதி உரை விளக்கத்துடன் 1,330 திருக் குறள்களைக் கொண்ட பலகைகள் அமைக்கப்பட்டு, ஓவியங்களுடன் மணிமாடம் புதிய வடிவம் பெற்றுள் ளது. 100 போ் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. வாகன நிறுத்துமிடம்,உணவகம் 27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப் பகுதிகளில் 162 காா்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் உள்ளன. பொதுமக்களின் வசதிக்காக, 3,336 சதுர அடியில் சிறப்பான உணவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, 72 போ் வரை அமர வசதிகள் உள்ளன. அத்துடன் நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அமைக்கப் பட்டுள்ளது. ஒலி - ஒளியில் மிளிரும் கற்தேர் திருவாரூா் தோ் வடிவில் 106 அடி உயரமுடைய கல் தோ் ஒலி - ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வகை செய்யப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முன்னதாக, தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு, “தமிழரின் அடையாளங்களை எங்கும் நிறுவிய கலைஞரின் கனவுப் படைப்பான வள்ளுவா் கோட்டம் புதுப்பொலிவு கண்டுள்ளது! அனைவருக்கும் பொதுவான வள்ளுவரையும் - வள்ளுவத்தையும் போற்றுவோம்! மானிடச் சமுதாயம் முழுக்கக் கொண்டு சேர்ப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.