சென்னை, அக். 23 - ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கத்தின் வீடு - எம்எல்ஏ விடுதி அறைகளில் அமலாக்கத்துறை யும், எடப்பாடி பழனிசாமிக்கு மிக வும் நெருக்கமான சேலம் இளங்கோவ னுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறையும் ஒரே நேரத்தில் புகுந்துபுதனன்று சோதனை யில் ஈடுபட்டுள்ளன. சென்னை பெருங்களத்தூரில் 2016-இல் தனியார் நிறுவனம் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு திட்ட அனுமதி கோரியபோது, அமைச்ச ராக இருந்த வைத்திலிங்கத்துக்கு ரூ.27.90 கோடி லஞ்சம் வழங்கப்பட்ட தாக, அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மகன்கள் பிரபு, சண்முகபிரபு, தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பன்னீர்செல்வம், ரமேஷ் உள்ளிட்ட 11 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையிலேயே, தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகே உள்ள உறந்தை ராயன்குடிகாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்திற்கு சொந்தமான வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரி கள் புதனன்று சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. சென்னையில் வைத்தி லிங்கம் குடியிருக்கும் எல்எல்ஏ விடுதி யிலும் அமலாக்கத்துறை அதி காரிகள் சோதனை நடத்தினர். வைத்தி லிங்கத்திற்குச் சொந்தமான மொத்தம் நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு உள்ளது. அதேபோல அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி பழனிசாமிக்குச் மிக வும் நெருக்கமானவரும், அவரின் வலதுகரம் என்று கூறப்படுபவரும் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்த வருமான சேலம் இளங்கோவனுக்கு சொந்தமாக திருச்சி மாவட்டம் முசிறி யில் உள்ள எம்ஐடி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் வேளாண் பொறி யியல் கல்லூரிகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் புதனன்று சோதனை நடத்தினர். தற்போதைக்கு பாஜக கூட்டணி யில் அதிமுக இல்லை என்றாலும், எப்படியும் 2026 சட்டமன்றத் தேர்த லுக்குள் தங்கள் வசம் அதிமுக வந்துவிடும் என்று பாஜக நம்புகிறது. அதற்கு முன்னதாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் ஒன்று சேர்க்கவும் திட்ட மிட்டுள்ளது. இதற்காகவே அவர்கள் மீது இருக்கும் ஊழல் - முறை கேடு வழக்குகள் மீது விசாரணை அமைப்புக்களை ஏவி கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கியுள்ளதாக பேச்சுக்கள் எழுந்துள்ளன.