tamilnadu

img

சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் மோசடி

திருச்சிராப்பள்ளி, ஏப். 6 - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தில் சனிக்கிழமை வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது, “திருச்சி நாடாளு மன்றத் தொகுதியில் திமுக தலைமை யிலான கூட்டணியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார். திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் மதிமுக விற்காக உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் தனித்தன்மையைப் பாதுகாக்க, தனி சின்னத்தை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. ஆகவே தான் தீப்பெட்டியை தேர்ந்தெடுத்தோம். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மோசடி செய்துவிட்டது. சின்னம் ஒதுக்குவதில் 5.9 சதவிகிதம் வாக்குகள் இருந்தாலே ஆறாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பம்பரம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்காமல், வேண்டுமென்றே தேர்தல் ஆணையம் செயல்பட்டது” என்று குற்றம் சாட்டினார். “மாநில அரசுகள் அதிகாரம் கொண்டதாக விளங்கிட வேண்டும் என்ற அடிப்படையில் மாநில சுயாட்சிக்காகவும், ஒன்றியத்தில் கூட்டாட்சி முறை நிலவவும் உரத்த குரல் கொடுப்போம். பாஜக அரசின் சர்வாதிகார, மதவாத செயல்பாடுகளை தடுத்து நிறுத்தவும், சமூக நீதியை காக்கவும் இதர ஜன நாயக சக்திகளுடன் இணைந்து மதிமுக  முனைப்புடன் பாடுபடும். படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத் தர தொடர்ந்து குரல் கொடுக்கும். விவசாயத்திற்காக தனி  நிதிநிலை அறிக்கை வெளியிட ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்” என்பன உள்ளிட்ட 74 அம்சங்கள் மதிமுக  தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.