சென்னை, மார்ச் 13- மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடும் ஆளுநர்களை பல்கலை கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச் செய லாளர் வைகோ அறிக்கை விடுத்துள் ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: தென் மண்டல பல்கலைக்கழ கங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய ஆளுநர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துக்களைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது. மாநில அரசுகளின் கல்விக் கொள்கையின்படிதான் பல்கலைக்க ழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணை வேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்கு வது மட்டும் பல்கலைக் கழகங்களின் கடமை அல்ல, அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக் கழகங்கள் பொறுப்பு ஆகும்.
எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும். மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டு க்கட்டை போடுகின்ற வேலை யைத்தான் ஆளுநர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள். தமிழ்நாட்டின் முந்தைய ஆளுநர் தற்போதைய பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போ தைய கவர்னர் ெஜக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத் தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார் ெஜகதீப் தங்கர். 7 பேர் விடுதலை குறித்த பிரச்சினை யில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமன தாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக ஆளுநர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார். எனவே, அவர், ஆளுநர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை. பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து ஆளுநரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கி ன்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, ஆளுநர் ரவியை நீக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.