சென்னை,பிப். 5 தமிழகத்தில் 2 தவணை தடுப்பூசி போட்ட வர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டி யுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்து வமனையில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடை பெற்றது. 4 வகையாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை இதுவரையில் 9 கோடியே 60 லட்சத்து 470 தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
4.17 கோடி பேருக்கு தடுப்பூசி
முதல் தவணை 90.48 விழுக்காடு போடப் பட்டு உள்ளது. இது நல்ல இலக்கு என்றாலும் 100 விழுக்காட்டை நோக்கி பயணிக்கி றோம். 2-வது தவணை 69.33 விழுக்காடு செலுத்தப்பட்டு உள்ளது. 4 கோடியே 17 லட்சத்து 232 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது. இன்னும் 90 லட்சம் பேர் 2-வது தவணை போடாமல் உள்ளனர். அவர்களை கண்டறிந்து போடும் பணி தொடர்ந்து நடை பெறும். 15-18 வயதுக்குட்பட்ட சிறுவர்க ளுக்கு 80 விழுக்காடு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. 2-வது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
புற்றுநோயை கண்டறிய அதிநவீன கருவிகள்
தமிழகத்தில் புற்றுநோய் பாதிப்பை கண்டறிய அதிநவீன கருவிகள் 10 மாவட்டங்க ளில் பயன்பாட்டில் உள்ளது. விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு நவீன கருவிகள் கொள்முதல் செயவதற்கான பணிகள் நடக்கிறது. புற்றுநோயை முதல் நிலை, 2-வது நிலையை கண்டுபிடித்து விட்டால் காப்பாற்றி விடலாம். தமிழகத்தில் புற்றுநோயால் ஆண்டுக்கு 70 முதல் 80 ஆயிரம் பேர் உயிரிழக்கிறார்கள். அவர்களுக்கு பாதிப்பை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது. 2030-க்குள் குறைந்தது 3-ல் 2 பங்காவது (66 விழுக்காடு) புற்று நோய் பாதித்த முதல் மற்றும் 2-வது நிலை கண்டுபிடிப்பது என இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது. இந்த இலக்கு நிறைவேறும் போது புற்றுநோய் உயிரிழப்பு சரிபாதியாக குறைய வாய்ப்பு உள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 முதல் 45 விழுக்காடாக இருந்த இறப்பு 24 விழுக்காடாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது உடனிருந்த சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன் “கொரோனா பரவல் குறைந்து வருவதால் முகக்கவசம் அணியக்கூடாது என்பது இல்லை. பொதுமக்கள் அடுத்த 2 வாரங்களுக்கு கட்டுப்பாடுகளை கடை பிடிக்க வேண்டும்” என்றார். இந்த ஆய்வின் ன்போது மருத்துவக்கல்வி இயக்குநர் நாராயணபாபு, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்.