tamilnadu

img

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் சார்பில் சென்னையில் ஞாயிறன்று (ஜன. 22) நடைபெற்ற சிறப்பு மாநாட்டில் தட்சிண ரயில்வே பென்ஷனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் எழுதிய “புதிய பென்ஷன் திட்டத்தை முறியடிப்போம், பழைய பென்ஷன் திட்டத்தை வென்றெடுப்போம்”  என்ற நூல் வெளியிடப்பட்டது. நூலை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு வெளியிட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தின் செயல் தலைவர் எம்.துரைபாண்டியன் பெற்றுக் கொண்டார். உடன் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் உள்ளனர்.