tamilnadu

img

உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

முதல்வர் விடுத்த கோரிக்கை

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதிகள் பங்கேற்றுள்ள இந்த விழாவில்  மாநிலத்தின் சார்பாக சில  கோரிக்கைகளை வைக்க நான் விரும்புகின்றேன்.

  1. உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்.
  2. தமிழ் மொழி உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும்.
  3. பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும்.

 

இந்த கோரிக்கைள் நிறைவேற உயர்நீதிமன்ற தலைமை  நீதிபதி, மற்றும் தமிழ்நாட்டிலிருந்து தில்லி சென்று உச்சநீதி மன்றத்தில் நீதிபதிகளாக செயலாற்றும்  நீதிபதிகளும் துணை நிற்க வேண்டும். நீதிபதிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள் என்று நான் நம்புகின்றேன்.

 வழக்கறிஞர் சேமநல நிதி உயர்வு

வழக்கறிஞர்கள் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதி மூலம் வழங்கப்படும் சேம நல நிதியானது ரூபாய் 7 லட்சத்திலிருந்து 10 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் .  கொரோனா பெருந்தொற்றால் உயிரிழந்த சுமார் 450 வழக்கறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட 20 கோடி ரூபாய் தொகையினை மாநில அரசு விரைவில் வழங்கும்.  சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் இயங்கிவரும். பல்வேறு நீதிமன்றங்களை புதிய 9 மாடி கட்டடத்தில் அமைக்கக்கூடிய வகையில் 20 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் பல்வேறு நீதிமன்றங்களை அமைக்கும் வண்ணம் கடந்த 20-4-2022 அன்று 4.24 ஏக்கர் நிலம் நீதித்துறைக்கு அரசு வழங்கி உத்திரவிட்டுள்ளது. அந்தக் கட்டடம் அமைந்தால் நீதித்துறை உட்கட்டமைப்புக்கு அடுத்த 100 ஆண்டுகளுக்கான தேவை பூர்த்தி ஆகும் என்பதில் ஐயம் இல்லை.

சென்னை, ஏப்.23 தமிழ்மொழி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக இருக்கவேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.23)  நடைபெற்ற நீதி மன்றக் கட்டட திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா வில் அவர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: சட்டத்தின் ஆட்சியை, சமூக நீதியின் ஆட்சியை, நீதி நெறிமுறைகளையும், விதி முறைகளையும் முறையாகப் பின்பற்றும் ஆட்சியை வழங்க வேண்டும் என்ற உறுதி யோடு, தமிழ்நாட்டில் நல்லாட் சியை வழங்கிக் கொண்டி ருக்கிறோம்.  சட்டத்தின் குர லாக மட்டுமல்ல, மக்களின்  குரலாகவும் பலநேரங்க ளில் ஒலிக்கக் கூடியவராக  நம்முடைய உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசர் செயல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மக்களின் மனசாட்சியாக....

ஆந்திர மாநிலத்தில் பொன்னாவரம் என்ற கிராமத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து இன்றைய நாள் இந்தியா வின் உச்சநீதிமன்றத் தலைமை நீதியரசராக அவர்  உயர்ந்து நிற்கக் காரணம், இந்திய மக்களின் மனசாட்சி யின் குரலாக அவர் இருக் கின்ற காரணம் தான். அது தான் அவரது தீர்ப்புகளிலும், தலைமை நீதியரசர் என்ற முறை யில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றக்கூடிய உரைகளி லும் எதிரொலித்துக் கொண்டி ருக்கிறது. ஜனநாயகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்ட நீதியரசரான இவர், தற்போது நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கையைப் பெற்றவராக அவர் திகழ்ந்து கொண்டிருக்கிறார். நாடாளுமன்றம், சட்ட மன்றம், நீதிமன்றம் ஆகிய  மூன்றும் மக்கள் மன்றத்தின்  விருப்பங்களை, உணர்வு களைப் பிரதிபலிக்கக்கூடிய மன்றங்களாக செயல்பட வேண்டும். நீதியரசர்  அப்படித் தான் செயல்பட்டு வருகிறார் என்பதற்கு ஏராளமான எடுத்துக் காட்டுகளை என்னால் எடுத்துக்  கூற முடியும். ‘. நாகரிக சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும், மறு மலர்ச்சிக்கும், மக்களின் பாதுகாப்பிற்கும், அவர்களது உரிமை பாதுகாக்கப்பட்டு செழித்தோங்குவதற்கும், சுதந்திரமாக செயல்படும் நீதித்துறை தேவை என்பதை நமது அரசியலமைப்பு உறுதி  செய்கிறது. அதன்படி தமிழ்நாடு  அரசும் செயல்பட்டு வருகிறது.அனைத்து மக்களுக்கும் விரைவில் நீதி கிடைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிக ளையும் முன்னுரிமை அடிப் படையில் இந்த அரசு செய்து வருகிறது.

காரைக்குடியில் சட்டக் கல்லூரி

கடந்த ஆண்டு மட்டும் சார் நிலை நீதிமன்றங்களுக்கு 64 நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான  பயிற்சிகளும் வழங்கப்பட் டுள்ளன. கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் 3 வணிகவியல் நீதிமன்றங்கள், உரிமையியல் நீதிபதி நிலையில் அமைப் பதற்கான ஆணைகள் வெளி யிடப்பட்டுள்ளன.  3 வணிகவி யல் நீதிமன்றங்கள் மாவட்ட நீதிபதி நிலையில் அமைப் பதற்கும் திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் புதியதாக சார்பு நீதிமன்றங் கள் அமைக்கவும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட் டையில் கூடுதல் மாவட்ட  நீதிமன்றம் அமைக்க வும் ஆணை வெளியிடப்பட்டுள் ளது. வாடகைக் கட்டடங்க ளில் இயங்கி வரும் கீழமை நீதிமன்றங்களை படிப்படியாக சொந்தக் கட்டடங்களுக்கு மாற்றுவதற்கும் அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகின்றது. காரைக்குடியில் ஒரு சட்டக்கல்லூரி தொடங்கு வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. இப்படி பல்வேறு முன்னெடுப்புகளை நீதித் துறைக்கு தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. சட்டத்தின் ஆட்சி சட்டத்தின் ஆட்சியாக, சமூக நீதி ஆட்சியாக, நீதிநெறிமுறை கொண்ட ஆட்சியாக தமிழ்நாட்டு ஆட்சி செயல்பட்டு வருகிறது. இத்தகைய ஆட்சி யில், நீதித்துறையினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் எந்தவிதத் தாமதமும் இல்லா மல் நிறைவேற்றப்பட்டு வருகிறது. அதற்கு ஒரே காரணம், மக்களுக்கான நீதியே மகத்தானது என்பதோடு, கடைக்கோடி குடிமகனுக்கும் நீதி தாமதமின்றி கிடைக்க  வேண்டும் என்ற அடித்தளத் தில் செயல்பட்டு வருபவர்கள் நாங்கள். இத்தகைய நெறி முறைகளே எங்களை வழிநடத் துகிறது. இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி னார்.