tamilnadu

img

துறைமுக ஆணைய திருத்தச்சட்டத்தை திருத்துவதை கைவிட வலியுறுத்தல்

துறைமுக ஆணைய திருத்தச்சட்டத்தை திருத்துவதை கைவிட வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 21 - துறைமுக ஆணைய திருத்தச்சட்டத்தை திருத்து வதை கைவிட வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 20) துறைமுக நிர்வாக அலுவல கம் அருகில் தொழிலா ளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி  பிரச்ச னைகளை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், கடந்த 5 ஆண்டுகளாக நிலுவை யில் உள்ள போனஸ் பிரச்ச னையை சம்மேளனங் களுடன் பேசி ஒப்பந்தம் செய்து அனைவருக்கும் போனஸ் வழங்க வேண்டும். ஊதிய உயர்வு ஏற்பட் டாலும் ஓய்வூதியர்களுக்கு உயர்வு கிடையாது என்ற நிதி மசோதாவை ரத்து செய்ய வேண்டும், துறை முக நிதியை தனியார் வங்கி களில் முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும், துறைமுக மருத்துவ மனையை அதிநவீனத் தரத்துடன் மேம்படுத்த வேண்டும் ஆகிய கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. எம்பிடிஇயூ பொதுச் செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி (சிஐடியு) தலை மையில் நடைபெற்ற இந்த  ஆர்ப்பாட்டத்தில் நீர் வழி போக்குவரத்து சம்மேளன அகில இந்திய பொதுச் செய லாளர் டி.நரேந்திரராவ், எம்பிடிஆர்யூ பொதுச் செய லாளர் எஸ்.எஸ்.சரவணன் (ஏஐடியுசி) , சிபிடிடபில்யுசி  தலைவர் ஏ.பலராமன் (ஐஎன்டியுசி), டிடிடபில்யு செயல் தலைவர் என்.வி.ராஜேந்திரன்( எச்எம் எஸ்), எம்பிடிஇயு தலைவர் சரவணன்(எச்எம்எஸ்)  உள்ளிட்டோர் பேசினர்.