திருவள்ளூர் நகராட்சி 4-வது வார்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எம்.உதயநிலா மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ப.சுந்தரராசன் உட்பட பலர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.