தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் விவாதிக்க வேண்டிய பல பிரச்சனைகள் உண்டு.மத்தி யில் ஏழு ஆண்டுக்கால மோடி ஆட்சியும் தமிழ கத்தில் பத்தாண்டுக்கால அதிமுக ஆட்சியும் நகர்ப் புற மக்கள் வாழ்வில் முன்னேற்றங்களை சாதித்துள் ளதா என்பது இந்தத் தேர்தலில் முக்கிய கேள்வி. ஆனால், பாஜகவும், அதிமுகவும் இந்த மைய பிரச்சனையிலிருந்து தேர்தல் விவாதத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் “தனித்துப் போட்டி என பாஜக இப்போது முடிவெடுத்தி ருப்பது எங்களது நம்பிக்கையையும், பலத்தையும், எதிர்கால சிந்தனையையும் வெளிக்காட்டுகிறது. அந்த வகையில் வளர்ந்து வருகிற எங்கள் கட்சிக்கு இந்த உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் பயன் படும்” என்கிறார் .
தங்கள் கட்சி வளர்ச்சியை சாதிக்க ஒன்றிய அரசு செய்த “சாதனைகளை” அவர்களால் சொல்ல முடியுமா? எவ்வாறு தங்கள் கட்சி வளர்ச்சியை பாஜக மேற்கொள்ளும் என்பதை மற்றோரு செய்தி வெளிப்படுத்துகிறது.“அதிமுகவில் சீட் கேட்டு கிடைக்காமல் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் வார்டுகளில் பிரபலமான வர்களை பாஜகவினர் தேடிப்பிடித்து கட்சியில் சேர்த்து வருகின்றனர்”.-(பிப்.2;இந்து தமிழ் திசை). பாஜக மாநில பொதுச் செயலர் ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பாஜக பலம் அதிகரித்துள்ளது. .. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்ய பாஜக காத்திருக்கிறது. அதிமுகவில் சீட் கிடைக்காத வர்கள் மட்டும் இல்லாமல், திமுகவில் அதிருப்தியில் இருப்பவர்களும் பாஜகவுக்கு வரவுள்ளனர். பல்வேறு கட்சிகளில் இருப்பவர்கள் பாஜகவினருடன் தொ டர்பில் உள்ளனர்” என்றார்.ஏற்கனவே அதிமுக கூட்டணியில் உள்ளாட்சித் தேர்தல் இடப் பங்கீடு பேச்சுவார்த்தை தோல்வியடைந்து அதிமுக கூட்ட ணியில் இருந்து வெளியேறிய போது பாஜக தலை வர் அண்ணாமலை “இது தற்காலிக முடிவுதான்” என்று குறிப்பிட்டார்.இருப்பினும் அதிமுகவில் கட்சித் தாவலை ஊக்குவிக்க அவர்கள் தயங்கு வதில்லை.
பாஜகவின் இந்த சந்தர்ப்பவாத நடவடிக்கை களும், கட்சியை பலப்படுத்த குறுக்கு வழியில் பணம்,பதவி அச்சுறுத்தல் என பல உத்திகளை கையாண்டு ஆள் சேர்ப்பது போன்ற அனைத்தும் நாடறிந்த மோசடிகள்.இந்த தேர்தலிலும் மக்க ளுக்கு தாங்கள் மத்திய அதிகாரத்தில் இருந்து என்ன சாதித்தோம் என்பதை அவர்கள் எதுவும் சொல்ல முடியாத நிலையில் இப்படிப்பட்ட அரசியல் தில்லுமுல்லுகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது.
அதிகரிக்கும் தேவைகள்; குறைவான நிதி
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த பட்ஜெட்டில் நகர்ப்புற அடித்தட்டு மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான கட்டமைப்பு வசதி களை பெருக்குவதற்கான நிதி ஒதுக்கீட்டை அதி கரிக்கவில்லை. இதற்கான விளக்கமளித்து, தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக தலைவர் அண்ணா மலை பேசுவாரா? உண்மையான மதிப்பில், கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட ரூ.73,850-கோடியி லிருந்து இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட ரூ.76,549-தொகை மிகவும் குறைவு. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 0.5 சதவீதம் மட்டுமே. பணவீக்க மதிப்பு 5 சதம் என்பதை கணக்கில் கொண்டால் ஒதுக்கப்பட்ட தொகை கடந்த ஆண்டை விட குறைவு என்று கருதவேண்டியுள்ளது.உண்மையில் நகர்ப்புற ஏழைகள், நடுத்தர உழைக்கும் மக்களின் தேவைகளில் ஒரு சிறு பகுதியை நிறைவேற்றுவதற்குக் கூட ஒதுக்கப்பட்ட தொகை போதுமானதல்ல.
இந்தியா முழுவதும் நகரங்களில் வாழும் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது வெளிப்படையாக தெரிந்த உண்மை. நிதி யமைச்சர் தனது பட்ஜெட் உரையில் 2047-ல் 50 சத இந்தியா நகர்ப்புறமாக இருக்கும் என குறிப்பிட்டார். ஆனால், அதற்கேற்ற அளவில் மக்களின் அடிப்படை வாழ்க்கை தேவைகள் நிறை வேற்றப்படுகிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி.இதற்கான கொள்கைகள்,திட்டங் கள்,தேவையான நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகா ரங்கள் கொண்டதாக ஒன்றிய அரசு உள்ளது.ஆனால் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் உள்ள மோடி அரசு நகர்ப்புற உழைக்கும் மக்களுக்கு எதி ரான கொள்கைகளை கடந்த ஏழு ஆண்டுகாலமாக பின்பற்றி வருகிறது.தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவு அறிக்கையும் அதே திசை வழியில் அமைந்துள்ளது. நகர்ப்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் நகர்ப்புறங்களில் 20 கோடி மக்களுக்கு நிரந்தர வேலை இல்லை என்கிற அவல நிலை உள்ளது. நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டு வருவோம் என்று ஒன்றிய அரசு அறிவித்தது பெரும் அறிவிப்பாகவே உள்ளது. இதுபற்றியும் ஒன்றிய வரவு செலவு அறிக்கை மவுனம் காக்கிறது. வேலையின்மை பிரச்சனை உயிர் பிரச்சனையாக உருவெடுத்துள்ள போதி லும், மோடி அரசிடம் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவ தற்கான கொள்கைகள் எதுவும் இல்லை.
இன்றைக்கு நகர்ப்புறங்களில் தண்ணீர் பிரச்ச னை மக்களை கடுமையாக பாதித்து வருகிறது. பட்ஜெட்டில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நகர்ப் புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் தண்ணீர் இணைப்பு அளிக்க அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.இதுவரை தண்ணீர் இணைப்பு இல்லாத 2 கோடியே 70 லட்சம் குடும்பங்களுக்கு குடிதண்ணீர் வசதி ஏற்படுத்துவோம் என ஆரவாரமாக அறிவித்துள்ளனர். ஆனால் உண்மையில் பிபிபி(PPP) எனப்படும் தனியார், அரசு ,கூட்டு எனும் பெயரில் பெரும் தொழில் நுட்ப கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தண்ணீர் சப்ளையை தாரைவார்க்கும் நோக்கம் உள்ளது. கோயம்புத்தூரில் சூயஸ் நிறுவனத்திற்கு குடிநீர் விநியோகத்தை ஒப்படைத்தது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
ஏமாற்று அறிவிப்புக்களும் திட்டங்களும்
இந்தியா முழுவதும் உள்ள சுமார் 5000 எண்ணிக்கையிலான பெரிய நகரங்கள் உள்ளன.இந்த நகரங்களில் வாழும் ஏழை நடுத்தர மக்க ளின் வாழ்நிலை மிகவும் மோசமடைந்து வருகிறது. ஆனால், குடிநீர்,மின்சாரம் சுகாதாரம் என அனை த்து நகர்ப்புற சேவைகளின் கட்டணங்களும் கடுமையாக உயர்த்தப்பட்டு வருகின்றன. அண்மைக்காலத்தில் வீடற்றவர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேலாக அதிகரித்து வருகிறது. 40 சதம் குடிசை வாழ் மக்கள் உள்ளனர்.இவர்கள் வறுமைப் பிடியில் வதைபட்டுக் கொண்டிருக்கிறார் கள்.இந்த நிலையில் நாடு முழுவதும் குடிசை வாழ் மக்கள் தங்கள் குடியிருப்புக்களிலிருந்து வெளியேற்றப்படுவதும் அதிகரித்து வருகிறது. நீண்டகாலமாக குடிசைப் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு அவர்களது வாழ்விடத்தில் அவர்கள் வசிப்பதை உறுதிப்படுத்துவதற்கு பதிலாக அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடி மனைப் பட்டா கோரிய ஏராளமான போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்தாலும் அரசு நிர்வாகம் அதற்கு செவி சாய்ப்பதில்லை.
பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுவும் கடந்த ஆண்டு ஒதுக்கிய நிதியை விட உண்மையான மதிப்பில் குறைவுதான். இந்தத் தொகையில் 80 லட்சம் வீடுகள் கட்டித் தரப்போவதாக ஆரவாரமாக அறி வித்துள்ளனர்.குறைந்த தொகையை ஒதுக்கீடு செய்து 80 லட்சம் வீடுகள் கட்ட என்ன மந்திரம் வைத்திருக்கிறார்கள்?கடந்த ஆண்டு துவக்கப்பட்ட வீடுகளே முடிக்கப்படாமல் உள்ளது.எனவே ஏமாற்று அறிவிப்புக்களும் திட்டங்களும்தான் ஒன்றிய அரசிடம் அளவில்லாமல் இருக்கிறது. நகர்ப்புற மக்களின் சுகாதாரத்தை பாது காப்பதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. சுகாதாரத்திற்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்க வில்லை. ஆரம்ப சுகாதார நிலையங்கள் போன்ற கட்டணத்தை பெருக்குவதற்கு பதிலாக தனியார் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் போன்ற வற்றில்தான் அரசின் கவனம் உள்ளது. நகர்ப்புற மக்களின் முக்கிய பிரச்சனை போக்கு வரத்து. இதற்கும் கூட உருப்படியான திட்டங்கள் இல்லை 20 ஆயிரம் பேருந்துகள் விடப்போவதாக அறிவித்துள்ளனர். 5000 பெரிய நகரங்களுக்கு சராசரியாக நான்கு பேருந்துகள் என்று வருகிறது.இது வேடிக்கையான அறிவிப்பு.இதுவும்கூட அரசு தனியார் கூட்டு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்ப்பரேட் மூலதன குவியலுக்காக நகரங்கள்
பட்ஜெட்டில் தூய்மை பாரதம் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே ரூ. 2300 கோடிதான் ஒதுக்கப்பட்டுள்ளது.நகரங்களில்.கழிவு மேலாண் மையை தனியாருக்கு ஒப்படைக்கும் பல அறி விப்புகளை வெளியிட்டுள்ளனர். தனியாருக்கு கோடிகோடியாக மானியம் கொடுக்கிற அறிவிப்பு கள்தான் உள்ளன. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றில், தில்லி நகரத்தில் அதிகரித்துவரும் குப்பைகளை சுட்டிக்காட்டி தில்லியில் குதுப்மினார் உயரத்திற்கு குப்பைகளின் உயரம் அதிகரித்துள்ளதாக கிண்டலாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக உரு வெடுத்துள்ள காலநிலை மாற்றம் கடும் தாக்கத்தை நகரங்களில் ஏற்படுத்தி வருகிறது. சமீப ஆண்டுக ளில் சென்னையில் அவ்வப்போது பெய்து வருகிற கனமழை இதற்கோர் எடுத்துக்காட்டு.ஒருபுறம் மழை பாதிப்புகள், மறுபுறம் கடுமையான வெப்பம், இயற்கை பேரிடர்களால் அதிகமான மக்கள் இறப்பு என நகர்ப்புறங்களில் துயரங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்த பிரச்சனையை ஆட்சி யாளர்கள் உரியவாறு அக்கறையுடன் அணுகு கிறார்களா என்பது கேள்விக்குறி.ஒன்றிய அரசின் வரவு செலவு திட்டத்தில் இந்த பிரச்சனை குறித்து எவ்வித அறிவிப்போ, திட்டங்களோ எதுவுமில்லை.
நகரங்களை பெரும் கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களின் மூலதனத்தை பெருக்குவ தற்கான மையங்களாக மாற்றுவதில்தான் ஒன்றிய அரசின் முழுக்கவனமும் உள்ளது. இதற்காகவே நகர்ப்புற கட்டமைப்பு ,குடிநீர் வசதி உள்ளிட்டு அனைத்து நகர்ப்புற சேவைகளையும் தனியார் கட்டுப்பாட்டில் கொண்டுவருகிற கொள்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. எனவே, பாஜக, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தமிழக வாக்காளர்களின் வாக்குகளை பெறுவதற்கு தகுதியற்ற கட்சி.பாஜக அரசுடன் தோளோடு தோள் நின்று நகர்ப்புற தாராளமயக் கொள்கைகளை பின்பற்றி வந்த அதிமுகவிற்கும் .தமிழக வாக்கா ளர்களின் வாக்குகளை பெறுவதற்கு அருகதை இல்லை. நகர்ப்புற மக்களின் வாழ்வுரிமைக்கான இயக்கத்தை வலுவாக கட்டவேண்டிய அவசியம் உள்ளது. உள்ளாட்சி மன்றங்களில் உழைக்கும் மக்களுக்கான உரிமைகளை எதிரொலிக்கும் பிரதிநிதிகளை தேர்தலில் தேர்ந்தெடுக்கிற பொறுப்பு மக்கள் கையில் உள்ளது.