தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி பகுதியில் வாழும் மக்களுக்கு வேலை கேட்டு மனு கொடுக்கும் போராட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் எம்.ஜோஷி தலைமை வகித்தார். ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணியை மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட பொருளாளர் க.சண்முகம். மாநிலக்குழு உறுப்பினர் எம்.சண்முகம். சிபிஎம் ஒன்றிய செயலாளர் எம்.ஆர்.சுப்பையா மற்றும் நிர்வாகிகள் ஆர்.சி.ரெங்கசாமி.ஏ.தேவராஜன். எஸ்.ஆறுமுகம். சி.சந்திரசேகர்.எஸ்.சோலையன் உள்பட பலர் பங்கேற்றனர்.