tamilnadu

img

உ.பி. பாஜக அரசை கண்டித்து மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உ.பி. பாஜக அரசை கண்டித்து மின்சார ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 29-  உத்தரப்பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில், பொதுத்துறை நிறுவனமான மின் துறையை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதை எதிர்த்து கடந்த இரண்டு மாதமாக மின்வாரிய தொழிலாளர்களும், பொறியாளர்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.  போராட்டம் நடத்துவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய உத்தரபிரதேச பிஜேபி ஆதிநாத் அரசாங்கம், போராட்டம் நடத்தக்கூடிய தலைவர்களை, . பொறியாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது. முக்கிய நிர்வாகிகளை வீட்டு காவலில் வைப்பது. இரவு நேரத்தில் வீடுகளில் சோதனை செய்வது, குடியிருப்பு பகுதிகளில் மின் இணைப்பு, குடிநீர் துண்டிப்பு செய்வது என்ற மிகப்பெரிய அடக்குமுறை செய்கிறார்கள்.  எனவே உத்தரபிரதேச மின்வாரிய தொழிலாளர்கள், பொறியாளர்கள் மீது அடக்கு முறையை ஏவி விடும் பிஜேபி யோகி ஆதிநாத் அரசை கண்டித்தும், அடக்கு முறையை உடனடியாக கைவிட்டு போராடும் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக் கோரியும், தனியார்மய நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரியும், மின்சார தொழிலாளர்கள், பொறியாளர்கள், திருச்சி தென்னூர், திருச்சி மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் அலுவலகம் முன் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணை தலைவர் ரெங்கராஜன். தலைமை தாங்கினார். டிபிஏஎஸ் ஆரோக்கியசாமி, எம்ளாய்ஸ் பெடரேஷன் சிவ செல்வன், இன்ஜினியர் சங்க பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பழனியான்டி, நடராஜன் டிபிஏஎஸ் பிரசன்னா ஆகியோர் பேசினார். இன்ஜினியர் சங்க ரெங்கநாதன் நன்றி கூறினார். இதேபோன்று துறையூர் அய்யம்பாளையம், வெள்ளனூர், அரியமங்கலம், மணப்பாறையில் மின்வாரிய பிரிவு அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பெரம்பலூர் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில், உத்தரபிரதேசத்தில் மின்துறையை பாதுகாக்க போராடிவரும் மின் ஊழியர்கள் மீது அடக்குமுறையை கைவிட வேண்டும் என தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் பெரம்பலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வில், அமைப்பின் சிஐடியு திருச்சி மண்டலச் செயலாளர் அகஸ்டின், சங்கத்தின் வட்டச் செயலாளர் ருத்ராபதி ஆகியோர் தலைமை வகித்தனர்.  இதில் அமைப்பின் வட்டச் செயலாளர் பன்னீர்செல்வம், பொதுக்கோட்ட பொறுப்பாளர் அண்ணாதுரை, பொறியாளர் கழகத்தின் சார்பாக கனிமொழி, அருள்ஜோதி, பொறியாளர் சங்கத்தின் சார்பாக அலெக்ஸ், இன்சாட் அகமது, இளந்தீபன், சித்ரா உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.