tamilnadu

img

சாலையோர உணவகங்களில் சுகாதாரமற்ற உணவு, கழிவறை

சென்னை, மே 5- அரசுப் பேருந்துகளில் தொலைதூரப் பயணங்கள் மேற்கொள்ளும் போது, இடை வெளிக்காக சாலையோர உணவகங்கள், கடைகளில் பேருந்தை ஓட்டுநர் நிறுத்து வதுண்டு. அந்த உணவகங்கள் சுகாதாரமான முறையில் உணவுகளைத் தயார் செய்கின் றனவா அல்லது அங்கிருக்கும்  கழிவறைகள் சுத்தமாக இருக் கின்றனவா என்பதெல்லாம் கேள்விக்குறிதான். பயணம்  செல்லும் அவசர சூழலில் அதை யெல்லாம் சகித்துக் கொண்டு பெரும்பாலானவர்கள் சென்று விடுவதுண்டு. இந்நிலையில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சாலை யோர உண்டு தங்கும்  விடுதிகளின் நிலை குறித்து  ‘அறப்போர் இயக்கம்’ ஆய்வை மேற்கொண்டுள்ளது. தொடர்ச்சியாக அரசு விரைவுப்  போக்குவரத்து ( எஸ்இடிசி) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக (டிஎன்எஸ்டிசி)அரசுப் பேருந்து களில் பயணம் செய்யும் 1,800  பேர் இந்த ஆய்வில் ஈடுபடுத் தப்பட்டனர். இவர்களில் 92  விழுக்காட்டினர் மோட்டல்க ளிலுள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்று இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ராதா கிருஷ்ணன் கூறுகையில், “ஆண்கள், சுகாதாரமற்ற இந்தக் கழிப்பறைகளை உபயோகிக்க விரும்புவ தில்லை; மாறாக மரங்களிலும், புதர்களிலும் பேருந்தின் பின்புறத்திலும் சிறுநீர் கழித்து விடுகின்றனர்.

ஆனால் பெண் கள்தான் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். இந்தக் கழிப்பறைகளைப் பயன்படுத்தும்பட்சத்தில் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சு கின்றனர். இரவு நேரங்களில் பேருந்துகளில் பயணிப்பவர்க ளில் சிலர், தண்ணீர் குடிக்கா மலே இருந்து விடுகின்றனர். சமீபத்தில் பெண் பயணி ஒரு வர் தூத்துக்குடியில் சாலை யோர உணவகத்தில் இது  குறித்து கேள்வி எழுப்பினார்.  ஆனால் அங்கிருந்த ஊழியர் கள் அவரை தவறாக நடத்தினர். கழிப்பறைகளைத் தாண்டி, உணவகங்களில் விற்கப்படும் உணவுகளும் சுகாதாரமற்று இருக்கின்றன. இதற்கு அதிக கட்டணம் பயணிகளிடம் வசூலிக்கப்படுகிறது’’ எனத் தெரிவித்துள்ளார். இந்தக் கணக்கெடுப்பிற்கு பதிலளித்துள்ள போக்கு வரத்துத் துறை அதிகாரிகள், இந்தப் புகார்கள் பிரச்சனை யின் தீவிரத்தைப் பெரிதுபடுத் துவதாகவும், இருப்பினும் தூத்துக்குடி சம்பவம் தொடர் பாகத் தாக்கல் செய்யப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். விரைவு போக்குவரத்துக் கழகம் தரப்பில் இருந்து தரப்பட்ட விளக்கத்தில், கடந்த ஓராண் டில் நடத்தப்பட்ட மாதாந்தர ஆய்வுகளின் காரணமாக, மோட்டல்கள் தொடர்பாக தாங்கள் பெறும் புகார்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், சமீபத்தில்கூட பதினோரு மோட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்ட தாகவும் கூறியுள்ளது.