tamilnadu

ஒற்றுமையே பலம் : ஆசியன் நாடுகள் கருத்து

நாம் பென், பிப்.18- ஒற்றுமையும், ஒத்த கருத்துமே ஆசியன் குழுவில் உள்ள நாடுகளின் செயல்பாடுகளில் முக்கியமான அங்கமாக இருக்கின்றன என்று அக்குழு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச் சர்கள் தெரிவித்துள்ளனர். கம்போடியாவின் தலைநகர் நாம் பென்னில் ஆசியன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச் சர்களின் மாநாடு பிப்ரவரி 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மியான்மர் தவிர்த்து அனைத்து நாடுகளும் இதில் பங்கேற்றன. கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி யாகப் பங்கேற்கும் கூட்டம் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மிகச் சிறப்பாக தற்போதைய மாநாட்டை கம்போடியா நடத்தியுள்ளது என்று பங்கேற்ற அனைத்து ஆசியன் நாடுகளும் பாராட்டு தெரிவித்துள்ளன. மாநாட்டு விவாதம் பற்றிப் பேசிய சில அமைச் சர்கள், “ஏராளமான சவால்களை ஆசியன் நாடுகள் சந்தித்து வருகின்றன. இருந்தாலும், மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் வெளிப் படையாகத் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த னர்.

அமைதியும், நிலையான தன்மையும்தான் இலக்கு என்று தீர்மானித்துக் கொண்டனர். பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சனைகளில் ஆழமான மற்றும் விரிவான விவாதங்கள் நடை பெற்றன” என்று குறிப்பிட்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற வியட்நாம் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் அதி காரிகள் உற்சாகமாகக் காணப்பட்டனர். நேரடி யாக ஒரு சில நாடுகள் பங்கேற்கத் தயக்கம் காட்டியபோது, இணையதளம் வழியாக அவர்கள் பங்கேற்கலாம் என்று ஆசியன் அமைப்பு அனுமதியளித்ததற்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர். பொருளாதார மீட்பு, பெருந்தொற்றை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பு, ஆசியன் உறுப்பு நாடுகளுக்கிடையில் சர்வதேச பிரச்சனைகள் தொடர்பான விவாதத்தை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட அம்சங்களை முன் வைத்து அவர்கள் பேசினர். ஆசியன் அமைப்பு என்பது புவியியல் ரீதி யான ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடங்கி விட்டாலும் சர்வதேச அளவிலான பிரச்சனை களில் கூடுதல் பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதில் ஒருமித்த கருத்து நிலவியது. மியான் மர் பற்றிப் பேசுகையில், அது ஆசியன் குடும்பத் தில் ஒரு அங்கம்தான் என்றும், தற்போது அங்கு நிலவி வரும் பிரச்சனையில் அந்நாட்டு மக்கள் தான் முடிவெடுக்க முடியும் என்றும் உறுப்பு நாடுகள் கருத்து தெரிவித்தன.