கடலூர்,பிப்.16- நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதங்க ளில் என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த நிதி ஆண்டைவிட இரட்டிப்பாக ரூ. 797 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. 9 மாத காலத்தில் தனது துணை நிறுவனத்தையும் சேர்த்து, 2,174 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்து, மின் வாரியங்களுக்கு வழங்கி சாதனை படைத்துள்ளது. 1.4.2021 முதல் 31.12.2021 வரையிலான நடப்பு நிதி ஆண்டின் (2021-22) முதல் ஒன்பது மாதங்கள் மற்றும் 3-வது காலாண்டில்,என்எல்சி இந்தியா நிறுவனத்தின் செயல்பாடுகளை அறி விப்பதற்காக பிப்.14 அன்று அந்நிறுவனத்தின் இயக்குநர் குழு கூட்டம், நெய்வேலியில் நடை பெற்றது. அக்கூட்டத்தில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனியாகவும், அதன் துணை நிறுவ னமான என்எல்சி தமிழ்நாடு மின் நிறுவனத்துடன் இணைந்து ஒட்டுமொத்த மாகவும் மேற்கொண்ட உற்பத்தி மற்றும் நிதிநிலை செயல்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, இந்நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், 1,848 கோடியே 50 லட்சம் யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி அளவை விட இது 34.51 விழுக்காடு அதிகமாகும்.
என்எல்சியின் துணை நிறுவனத்தையும் சேர்த்து முதல் ஒன்பது மாதங்களில் ஒட்டு மொத்தமாக 2,174 கோடி யூனிட் மின்சக்தி உற்பத்தி செய்துள்ளது. முந்தைய நிதி ஆண்டை விட 23.49 விழுக்காடு கூடுதல் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், நாட்டின் மின் நிலையங்களின் சராசரி மின்உற்பத்தித் திறன் 57.16 விழுக்கா டாக இருந்த நிலையில், என்எல்சி இந்தியா நிறுவன மின் நிலையங்கள் 70.20 விழுக்காடு என்ற மிகஅதிக உற்பத்தித் திறனுடன் இயங்கி, கூடுதல் மின் சக்தியை உற்பத்தி செய்து ள்ளன. நடப்பு நிதியாண்டில் இந்நிறுவனம் தனது துணை நிறுவனத்துடன் இணைந்து ரூ.9,381 கோடிக்கு வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டை விட இது 14 .43 விழுக்காடு அதிகம். நிகர லாபத்தைப் பொறுத்தவரையில் துணை நிறுவனங்களுடன் இணைந்து ரூ.784கோடியை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் ஈட்டிய ரூ. 589 கோடியை விட, இது 33.28 விழுகாடு அதிகம். மேலும், மின் வாரியங்களுக்கு மின்சக்தி வழங்கியது தொடர்பான நிலுவைத் தொகையின் பெரும்பங்கு நடப்பு நிதியாண் டில் வசூலிக்கப்பட்டு உள்ளது. 31.12.2020-ல் நிலுவையில் இருந்த ரூ.8,554 கோடியில் 51.30ரூ வசூலிக்கப்பட்டதன் மூலம் 31.12.2021-ல் ரூ.4,388 கோடி மட்டுமே நிலுவையில் உள்ளது.