tamilnadu

வரலாறு காணாத நிதியை வழங்கியுள்ளோம் : பிரதமர் சொல்கிறார்

திருச்சிராப்பள்ளி, ஜன. 2 - தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு வரலாறு காணாத நிதியை செலவு செய்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். திருச்சிராப்பள்ளியில், செவ்வாயன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் விமான நிலைய புதிய முனையத்தைத் திறந்து வைத்து, இந்தியிலும், ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி உரையாற்றினார். தமிழில் ‘வணக்கம்’ மற்றும் ‘எனது தமிழ்க்குடும்பமே’ என உரை யைத் துவங்கிய பிரதமர் மோடி தொடர்ந்து பேசியதாவது: கடந்த ஆண்டின் இறுதியில் வெள்ளத் தால் தமிழக மக்கள் அதிக வலிகளை அனு பவித்தீர்கள். அந்த மாதங்கள் கடினமான தாக இருந்தது. பலரை இழந்தோம். சொத்துக்களை இழந்தோம். பாதிக்கப்பட்ட மக்களின் நிலை எனக்கு தெரியும். சாத்தியமான அனைத்து உதவிகளையும் தமிழ் மக்களுக்கு அளித்து வருகிறோம். என் தமிழ் குடும்ப உறவுகளே வர இருக்கும் 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி  அடைய வேண்டும். வளர்ச்சி என்றால் பொரு ளாதாரம், கலாச்சாரம் இரண்டும் இருக்க வேண்டும். இந்தியாவின் பிரதிபலிப்பு தான் தமிழ்நாடு. வள்ளுவர், சுப்பிரமணிய பாரதி உள்ளிட்ட ஞானிகள் பல படைப்புகளை, இலக்கியங்களை தந்துள்ளனர். இந்த மண் அவர்களை உருவாக்கி உள்ளது.

எனவேதான் நான் தமிழ்நாடு வரும் போதெல்லாம் நான் புதிய சக்தியை பெற்று செல்கிறேன். திருச்சி என்று சொன்னாலே வளர்ச்சி கொட்டிக்கொடுக்கிறது. பல்லவர் கள், சோழர்கள், நாயக்கர்கள் வார்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. எனக்கு ஏராளமான தமிழ் நண்பர்கள் உள்ளனர். அவர்களிடம் இருந்து தமிழ் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டேன். எனவே தான் நான் எங்கு சென்றாலும் தமிழ் பற்றி பேசாமல் இருந்தது இல்லை. தமிழ் கலாச்சாரம் உலகம்  முழு வதும் பரவ வேண்டும் என்ற ஆசை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்து  உள்ளது. நவீன கட்டமைப்பில் முதலீடு அதி கரித்து உள்ளது. இதன் ஆதாயம் தமிழ்நாட்டு க்கும் கிடைத்து வருகிறது. மேக் இன் இந்தியாவின் பிராண்ட் அம்பாசிடராக தமிழ்நாடு மாறிக்கொண்டு இருக்கிறது. உல கின் சிறந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 5-ஆவது இடத்தில் உள்ளது. ஒன்றிய அமைச்சர்கள் 40க்கும் மேற்பட்ட வர்கள் 400 முறை தமிழ்நாடு வந்து உள்ள னர். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் காரணமாக 3 மடங்கு வளர்ச்சி அதிகரிக்கும். திருச்சியை தவிர பக்கத்து நகரங்களிலும் முதலீடுகள் அதிகரிக்கும். சுற்றுலா, கல்வி பலம் கூட்டப்படும். தமிழ்நாட்டில் புதிதாக 5 ரயில் திட்டங் கள் தொடங்கப்பட்டுள்ளன. இதனால் தொழில் வளர்ச்சி, மின் உற்பத்தி பெருகும். திருவரங்கம், மதுரை, ராமேஸ்வரம், சிதம்பரம், மதுரை, வேலூர் போன்ற இடங் களை இணைக்கின்றன. இவை ஆன்மீகத் தின் புதிய மையங்கள்.

கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் கவனம் கடற்கரையோர முன்னேற்றம், மீனவர்களின் நலன் ஆகியவற்றுக்கு முக்கி யத்துவம் கொடுக்கப்படுகிறது. மீன்வளத்து க்கு தனித் துறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.  ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கு உதவி அளிக்கப் படுகிறது. மீனவர்களுக்கு பல உதவிகள் கிடைத்து வருகிறது. விவசாயிகளுக்கு கிஷான் அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது. சாகர்மாலா திட்டத்தால் துறைமுகங்  கள், நல்ல சாலைகளுடன் இணைக்கப்பட்டு ள்ளன. காமராஜர் துறைமுகமும் சிறந்த துறைமுகமாக உருவாகி உள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிய அரசு  வரலாறு காணாத நிதியை செலவு செய்து வரு கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மாநி லங்களுக்கு ரூ.120 லட்சம் கோடியை ஒன்றிய அரசு அளித்து உள்ளது. இரண்டரை மடங்கு அதிக நிதி அளித்து உள்ளது ஒன்றியஅரசு.

தமிழ்நாட்டின் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு ஒன்றிய அரசின் ரேசன் அரிசி, கான்கிரீட் வசதிகள், எரிவாயு இணை ப்புகளை கொடுத்து வருகிறது. தமிழ் இளை ஞர்களின் மீது அமோகமான நம்பிக்கை  எனக்கு இருக்கிறது. தமிழ் இளைஞர்களி டம் புதிய எண்ணத்தை என்னால் காண முடியாது. அவர்களிடத்தில் எனக்கு நம்பி க்கை உள்ளது. புதிய உற்சாகம் தான் வளர்ச்சி அடைந்த இந்தியாவின் சக்தியாக  மாறும்.  இவ்வாறு பிரதமர் மோடி பேசியுள்ளார். பட்டமளிப்பு விழா மற்றும் விமான  நிலைய புதிய முனையத் திறப்பு விழாக் களில், விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, ஒன்றிய இணையமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள் எ.வ. வேலு, கே.என். நேரு, ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா  மற்றும் திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட் டோர் பங்கேற்றனர்.