மதுரை - போடி 90 கிலோமீட்டர் தூரத்தை 13 ஆண்டுகள் வேலை பார்த்ததைப் போல, இராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17 கிலோ மீட்டரை 5 ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் போல தமிழகத்தின் முக்கியமான 75 ரயில் நிலையங்கள் அடுத்த பல ஆண்டுகள் இடிபாடுகளுக்கிடையில் தான் இருக்கப் போகிறது.
மதுரை, ஆக.6- தமிழகம் மற்றும் தெற்கு ரயில்வே யின் வளர்ச்சித் திட்டங்கள் புறக்க ணிக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்ட னம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடப்பு கூட்டத்தொடரில் இரயில்வே துறை சார்ந்து இரண்டு முக்கிய கேள்வி களை கேட்டிருந்தேன். ஒரு கேள்வி, தமி ழக வளர்ச்சித் திட்டங்களை குறித்ததா கும். இன்னொரு கேள்வி, தெற்கு ரயில் வேயில் ரயில் நிலைய வசதி விரிவாக் கம் குறித்ததாகும். இந்த இரண்டு கேள்விக்கும் அமைச்சர் கொடுத்துள்ள பதில் தமிழகமும் தெற்கு ரயில்வேயும் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. ரயில் வளர்ச்சி திட்டங்களைப் பொறுத்தவரை 2023 ஏப்ரலில் தமி ழகத்தில் 23 வளர்ச்சி திட்டங்கள் நடப் பில் உள்ளன என்று பதிலில் கூறியுள் ளார். இதில் ஒன்பது திட்டங்கள் புதிய பாதை திட்டங்கள் ஆகும். மூன்று திட்டங்கள் அகல பாதை திட்டங்கள் ஆகும். 11 திட்டங்கள் இரட்டை பாதை திட்டங்கள் ஆகும். இந்த திட்டங்களுக கான மொத்த தூரம் 2848 கிலோமீட்டர் ஆகும். இந்த திட்டங்கள் 2006 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டவை ஆகும். இந்த 17 ஆண்டுகளில் இதுவரை வெறும் 839 கிலோமீட்டர் தூரம் தான் முடிக்கப்பட் டுள்ளது. இன்னும் 2009 கிலோ மீட்டர் தூரம் மீதமுள்ளது.
திட்டங்களை முடிக்க ரூ.26,502 கோடி தேவை
2848 கிலோமீட்டர் தூரத்திற்கு தேவையான மொத்த முதலீடு 35,580 கோடி ரூபாய். இதுவரை 839 கிலோ மீட்டர் தூரத்திற்கு செலவு செய்தது வெறும் 9078 கோடி ரூபாய். தமிழக திட் டங்களை முடிக்க இன்னும் 26 ஆயி ரத்து 502 கோடி ரூபாய் தேவை. ரயில்வே அமைச்சர் பதிலில் 2009 முதல் 2014 வரை செய்த செலவை விட 2014-23 கால கட்டத்தில் அதிகம் செலவு செய்யப் பட்டது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் காலத்தை காட்டிலும் மோடி காலத்தில் அதிக வளர்ச்சி உள் ளது என்பதை காட்ட அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் புள்ளி விவ ரங்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன. தமிழகத்தின் ரயில் வளர்ச்சி திட்டங்க ளுக்கு குறிப்பாக புதிய பாதை திட் டங்களுக்கு மற்றும் சில இரட்டை பாதை திட்டங்களுக்கும் வெறும் ஆயி ரம் ரூபாய் ஒதுக்கியதை நான் சுட்டிக் காட்டியிருந்தேன். அதையொட்டி நடப்பாண்டில் வெறும் பத்து கோடி முதல் 50 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்துள்ளார்கள். இருந்தபோதும் இந்த திட்டங்கள் முடிவடைய இன்னும் 20 ஆண்டுகள் ஆகும் என்பதை புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தமிழகத்தில் ரயில்வே துறையை பொறுத்தவரை தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டுக் கொண்டிருப்பதன் சாட்சி யாகத்தான் அமைச்சர் தந்துள்ள புள்ளி விபரங்கள் இருக்கின்றன. அதேபோல இன்னொரு பதிலில் ரயில் நிலைய வசதிகளை மேம்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில் தெற்கு ரயில்வேக்கு 75 ரயில் நிலை யங்கள் வசதி பெருக்க திட்டமிடப் பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதில் மதுரையும் உள்ளடங்கும்.
தேர்தலுக்காக மோடி அரசின் ஆடம்பர அறிவிப்பு
அவரது கணக்கில் 20 -21 இல் 204 கோடியும்; 2021-22 இல் 154 கோடியும்; 2022-23 இல் 147 கோடியும் செலவு செய்யப்பட்டதாம். 2023-24 இல் 1242 கோடி செலவு செய்ய திட்டமிடப்பட் டுள்ளதாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் 49 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் பதில் அளித்துள்ளார். இத்திட்டங்களுக்கு அடுத்த ஒன்பது மாதத்தில் ரூ.1242 கோடி செலவு செய்ய வேண்டும். ஆனால் முதல் மூன்று மாதத்தில் ஒதுகீடு செய்யப்பட்டு நடைபெற்றுள்ள பணி ஐந்து சதவிகிதம் கூட இல்லாத நிலையில் அடுத்த ஒன்பது மாதத்தில் 95 சதவிகித பணிகள் எப்படி முடிக்கப் படும்? மதுரை - போடி 90 கிலோமீட்டர் தூரத்தை 13 ஆண்டுகள் வேலை பார்த்ததைப் போல, இராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17 கிலோ மீட்டரை 5 ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருப்பதைப் போல தமிழ கத்தின் முக்கியமான 75 இரயில் நிலை யங்கள் அடுத்த பல ஆண்டுகள் இடி பாடுகளுக்கிடையில் தான் இருக்கப் போகிறது. திட்டங்களுக்கு உரிய நிதி ஒதுக்கி வேலைகளை தீவிரப்படுத்தாமல் தேர்தலுக்கான ஆடம்பர அறிவிப்பாக இரயில்வே அமைச்சரின் பதில் உள் ளது.