கண்ணூர், ஜுலை 10- ஒன்றிய அரசு ஊடகங்களை ஒட்டு மொத்தமாக விலைக்கு வாங்குவ தாகவும், ஒன்றிய அமைச்சர் அனு ராக் தாக்கூர் கலந்து கொண்ட ஊடக வியலாளர் சந்திப்பு அதன் ஒரு பகுதி என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் எம்.ஸ்வராஜ் தெரிவித்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கண்ணூர் மாவட்டக் குழு ஏற்பாடு செய்திருந்த கலாச்சாரப் பயற்சியை சனியன்று (ஜுலை 9) துவக்கி வைத்த எம்.ஸ்வராஜ் மேலும் பேசியதாவது: நாட்டின் பெரும்பாலான ஊட கங்கள் சங்பரிவாரிடம் சரணடைந்து, அவற்றுடன் மோதல் இல்லை என்று அறிவித்து விட்டன. மாத்ரு பூமி சஜி செரியனின் நெஞ்சில் ஈட்டி மாட்டிக்கொண்ட மந்திரியாக சித்த ரித்தது. இதற்கு முன்பெல்லாம் ஊழல், பெண் வன்கொடுமை வழக்குகளில் அன்றைய அமைச்சர்கள் ராஜினாமா செய்தபோது இந்த ஈட்டி பாயவில்லை. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் மூலம் ஆசிரியர் பகுதியில் காந்தியை நினைவுகூரத் துணிந்த பத்திரிகை அது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற அரசமைப்பின் மதிப்பீடு களுக்கு எதிரான நிலைப்பாட்டை ஆர்.எஸ்.எஸ் எடுக்கிறது. ஆர்.எஸ்.எஸ் அரசியல் என்பது சாவர்க்கரின் மத அரசு பற்றிய கருத்து. இன்று நாட்டை ஆள்பவர்கள்தான் மிகப்பெரிய தேசவிரோதிகள். அவர்கள் நாட்டை விற்றும் பன்முகத்தன்மையை ஒழிக்கவும் முயற்சிக்கிறார்கள். சந்தையில் விற்கப்படும் ஒரு பொருளாக தேசம் மாறுவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது என்றும் எம்.ஸ்வராஜ் கூறினார்.