சென்னை,டிச.28- ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்துள்ளது. ஒன்றிய அரசின் சுகாதாரத்துறையின் மருத்துவர் வினிதா, மருத்து வர்கள் பர்பசா, சந்தோஷ்குமார், தினேஷ்பாபு ஆகியோர் அடங்கிய இந்த குழுவினர் சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். அதன்பிறகு, சென்னை விமான நிலையத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் கேட்டறிந்தனர். கூடுவாஞ்சேரி - நந்திவரம் ஆரம்ப சுகாதார மையத்தையும் பார்வை யிட்டனர். ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் உற்பத்தி கலனை பார்வையிட் டனர். அதைத் தொடர்ந்து ஒமைக்ரான் சிறப்பு வார்டையும் பார்வை யிட்டனர். இதன் பிறகு ஒமந்தூர் அரசு பன்னோக்கு மருத்துவமனைக் கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கு வழங்கும் சிகிச்சை முறை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். கொரோனா நோயாளிக ளுக்காக எவ்வளவு படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. என்பதை யும் கேட்டறிந்தனர். நைஜீரியாவில் இருந்து வந்தவர் மூலம் ஒமைக்ரான் தொற்று வளசரவாக்கம் பகுதியில் அதிகம் பேருக்கு பரவியதால் ஒன்றிய அரசின் குழுவினர் அங்கு சென்றும் பார்வையிட முடிவு செய்துள்ள னர்.