சேலம், மே 8- மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சியில், கார்ப்ரேட்டுகளின் அந்தப் புறமாக இந்தியா மாறிக்கொண்டிருப் பதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்ட குழு சார்பில் மே தினம், காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா மற்றும் கட்சி கட்டிட நிதியளிப்பு விழா பொதுக் கூட்டம் சேலம் சிறை தியாகிகள் நினை வகம் அருகே நடைபெற்றது, மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாவட் டக்குழு செயலாளர் மேவை.சண்முக ராஜா தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற் குழு உறுப்பினர் பி.செல்வசிங் ஆகி யோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இதில் கே.பாலகிருஷ்ணன் பேசு கையில், உலக தொழிலாளிகளை ஒன்று சேர்த்த பெருமை காரல் மார்க் சையே சேரும். உலக தொழிலாளர் களை வாழவைக்கும் தத்துவத்தை தந்த வர் காரல் மார்க்ஸ். அதேபோன்று, இனம், மொழி, மதம், சாதி வேறுபாடு கடந்து கொண்டாடப்படும் தொழிலாளர் களின் தினமாக மே தினம் கொண்டாடப் படுகிறது. உழைப்பாளி இல்லாத உல கம் கல்லும் மண்ணும் ஆக தான் இருந்திருக்கும். அனைத்து மாற்றங்க ளும் உழைப்பாளி மக்களால் ஏற்பட் டதே. உலகத்தில் நபிகள், இயேசு என மதங்களை குறிப்பிட்டும், காந்தி ராம ராஜ்ஜியம் குறித்தும் வள்ளலார் அமை தியை குறித்தும் பேசி வந்த நிலையில், அவர்கள் மக்கள் வாழ வழி கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால், காரல் மார்க்ஸ் கண்டுபிடித்த சோசலிச சமூகம் மட்டுமே மாற்றாக அமைந்தது. 2018 ஆம் ஆண்டில் பிபிசி நிறுவனம் நடத்திய ஆய்வில் ஆயிரம் ஆண்டு களில் தலைசிறந்த தத்துவ மேதை காரல் மார்க்தான் என தெரிவித்தது. பிரம்மா தான் படைத்தார் என கூறி வரும் மதவாத சக்திகள் மக்களை இழிவு படுத்தி உழைப்பாளி மக்களை சுரண்டி வரும் சூழலே நாட்டில் உள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் பசி பட் டினி அதிகம் உள்ளது. இந்தியாவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தாய்மார் கள் ரத்தசோகை நோயினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 60 சதவீகித குழந்தை கள், ஊட்டச்சத்து இல்லாமல் பிறக் கிறார்கள், இதற்கு காரணம் அனைத்து வருமானமும் பெரு முதலாளிகளுக்கு செல்வதே.
இந்திய கார்ப்பரேட் முதலாளிகள் 60 லட்சம் கோடி சொத்துக்களை சேர்த்துள் ளனர். வெறும் 200 குடும்பங்களின் சொத்து மதிப்பு 60 லட்சம் கோடியாக உள்ளது. நாட்டையே உலுக்கிய கொரோனா காலத்திலும் கார்ப்பரேட் முதலாளிகளின் லாபம் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கார்ப்பரேட் முதலாளி களுக்கு ஆதரவாக பாஜக கட்சி செயல் பட்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும், பெரு முதலாளிகளுக்கு கொடுத்து வருகின்ற னர். ஏழை மக்கள் தொடர்ந்து ஏழை களாகப்பட்டு வரும் நிலையில், பெரு முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு வழங்கிய பல லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட் டுள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு நாட்டை காவு கொடுக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. நூறு நாள் வேலைத்திட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்களை பாதுகாக்க எந்த நட வடிக்கையும் எடுப்பதில்லை. போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை, இதே போன்று, அங்கன்வாடி குழந்தைக ளுக்கு நாடாளுமன்றத்தில் உறுப்பினர் கள் விவாதித்தும், 20 பைசாவைக்கூட உயர்த்த யோசிக்கும் ஒன்றிய பாஜக மோடி அரசு. ஒட்டுமொத்த இந்திய அர சின் வருமானத்தையும் கார்ப்பரேட்டு களுக்கு வாரி வழங்கும் வேலையை தொடர்ந்து செய்து வருகிறது. இந் நிலை நீடித்தால் வரும் காலத்தில், இந்தியா கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு குத்தகை விடப்பட்ட நாடாக வும், கார்ப்பரேட்டுகளின் அந்தப் புற மாக இந்தியா மாறிவிடும் என எச்ச ரித்தார். இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து திசைதிருப்பத்தான், பாஜக இந்துத்துவா கும்பல்கள் இந்து - முஸ் லிம் ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமி ழகத்தின் ஆளுநரின் செயல்பாடும் அது போல தான் உள்ளது. நாட்டில் இஸ்லாமி யர்களால் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. மோடி அமித்ஷா போன்றவர்க ளால் தான் இந்திய நாட்டிற்கு பெரும் ஆபத்து உள்ளது. மதவெறி பாஜக விற்கு முடிவு கட்ட மதசார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகள் செயல்பட்டு வருகிறது. ஒன்றிய மோடி அரசின் மக் கள் விரோத நடவடிக்கைகளை அம் பலப்படுத்தியும், உழைப்பாளி மக் களை அணிதிரட்டவும் முனைப்போடு இயங்கி காரல் மார்க்ஸ் முன்மொழிந்த தத்துவத்தை, நடைமுறையக்கிட உழைத் திட உறுதியேற்போம், என்றார். இந்நிகழ்வில், மார்க்சிஸ்ட் கட்சி யின் சேலம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.ராமமூர்த்தி, எம்.குணசே கரன், ஐ.ஞானசௌந்தரி, பொன்.ரமணி, ஜி.கணபதி உள்ளிட்ட திரளா னோர் பங்கேற்றனர்.