tamilnadu

ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்திற்கு உ.மதிவாணன் தலைவர்

சென்னை,ஜன.17- தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் உ.மதிவாணன் நியமனம் செய்யப்படுவதாக முதல்வர் மு.க.  ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும்  மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) 1974 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியால் ஆதிதிராவிடர்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்டு, தொடர்ந்து இயங்கி வருகிறது. தாட்கோவின் கட்டுமானப் பிரிவினால் வீடற்ற ஆதி திராவிடர்களுக்குத் தீப்பிடிக்காத வீடுகள், பள்ளி விடுதிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை யும், மேம்பாட்டுப் பிரிவால்ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் தேவைக் கேற்ப பல்வேறு பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவராக உ.மதிவாணனை நியமித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜன.17 அன்று உத்தரவிட்டுள்ளார். இளங்கலை மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்ற உ. மதிவாணன், 1996 முதல்  2001 வரை திருவாரூர் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராகவும், திருவாரூர், கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப் பினராகவும் மற்றும் தமிழக பால்வளத் துறை அமைச்சராகவும் பணிபுரிந்த நீண்ட அனு பவம் கொண்டவர்.