ஒரே கல்லில் இரண்டு மாங்காய்
எரிவாயு, பெட்ரோலியம் போன்ற மாசு படுத்தும் ஆற்றல் வளங்களிலி ருந்து விடுபட்டு சூரிய ஆற்றல் , காற்று சக்தி ஆகியவைகளை நோக்கி உலகம் சென்று கொண்டிருக்கிறது. மாசில்லா ஆற்றல் கொடுப்பதில் லித்தியம் அயனி பேட்டரிகளும் ஒன்றாகும். ஆனால் அவையும் மறு சுழற்சி செய்வதில் சுற்று சூழல் மாசு ஏற்படுத்துகின்றன. இப்போது சிங்கப்பூரி லுள்ள நான்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சுற்றுச் சூழலுக்கு மிகவும் உகந்த முறையில் அவற்றை மறு சுழற்சி செய்யும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர். பயன் படுத்தபட்ட பேட்டரிகளிலி ருந்து அரிதான உலோகங்க ளைப் பிரித்தெடுக்க இந்த முறையில் பழத்தோல் பயன்படுத்தப்படுகிறது. அந்த உலோகங்கள் பின்னர் புதிய பேட்டரிகளில் பயன்படுத்தப்படு கின்றன. பழத்தோலை பயன்படுத்துவதன் மூலம் உணவுக் கழிவு மற்றும் மின்னணுக் கழிவு இரண்டிற்கும் ஒரே நேரத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. லித்தியம் அயனி பேட்டரிகளை மறு சுழற்சி செய்யும் பிற முறைகளில் அதீத வெப்பம் மற்றும் வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மீண்டும் மாசை ஏற்படுத்தி உடல் நலம் மற்றும் பாதுகாப்பு அபாயங்களை உண்டாக்குகின்றன. “நடைமுறையிலுள்ள மின்னணுக் கழிவுகளை மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலை முறைகள், அதிக சக்தியை வேண்டுவதாகவும் தீங்கு விளை விக்கின்ற மாசையும் திரவக் கழிவுகளையும் வெளிவிடுகின்றன. மின்னணுக் கழிவுகள் அதிகரித்து வரும் சூழலில் சுற்று சூழலுக்கு உகந்த முறைகள் அவசர தேவையாக இருக்கின்றன. அதை உயிரி மக்கும் பொருட்களைக் கொண்டு செய்ய இயலும் என்பதை எங்களது குழு நிரூபித்துள்ளது” என்கிறார் இந்த ஆய்வின் பங்கெடுத்த பேராசிரியர் மாதவி சீனிவாசன். இந்தக் குழு வெறும் ஆரஞ்சுப் பழத் தோலையும் சிட்ரிக் அமிலத்தை யும் பயன்படுத்தி தொழிற்சாலை முறையில் கிடைக்கும் அதே விளைவு களை ஏற்படுத்திக் காட்டியுள்ளனர். இதற்கு அதிக வெப்பமும் தேவைப்பட வில்லை.
வாலை எப்போது இழந்தோம்?
சிறார்களை வாலுப்பயல்கள் என்று சிலர் அழைப்பார்கள். அந்த மனோ பாவத்தை விட்டுவிட்டு அறிவியல் ரீதி யாக பார்த்தால் குரங்குகளுக்குதான் வால் கள் இருக்கின்றன. மனிதக் குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் வால்கள் இல்லை. இதற்கு ஒரு ஒட்டுண்ணி காரணமாக இருக்கலாம் என்கிறது ஒரு ஆய்வு. வால்கள் வளர்வதற்கு முக்கியமான Tbxt எனும் மரபணுக்களில் 25 மில்லியன் ஆண்டு களுக்கு முன் இந்த ஒட்டுண்ணி தங்கிவிட்ட தாம். குரங்குகளையும் மனிதக் குரங்குகளை யும் வேறுபடுத்தும் மிக முக்கிய தருணம் இது என்கிறது இந்த ஆய்வு. இது ஃபிப்ரவரி 29 தேதி யிட்ட நேச்சர் இதழில் வெளிவந்துள்ளது. இப்போதும் சில குழந்தைகள் ஸ்பினா பிஃபிடா எனும் கோளாறுடன் பிறப்பதற்கு இந்த மரபணுப் பிறழ்வு காரனமாக இருக்க லாம். (ஸ்பினா பிஃபிடா- தண்டுவடத்தை சூழ்ந்திருக்கும் குழாய் இறுதிவரை மூடாமலி ருக்கும் கோளாறு). மரபணுக்களில் தங்கி விட்ட இந்த ஒட்டுண்ணிகளால் ஏற்பட்ட மாற் றங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டு பின் நமது மரபணுவின் நிரந்தர அங்கமாக மாறியிருக்கும். ஒரு காலத்தில், ட்ரான்ஸ்போசான்ஸ் எனப்படும் இந்த மர பணு ஒட்டுண்ணிகள் பயனற்ற குப்பை என ஆய்வாளர்களால் கருதப்பட்டன. ஆனால் இவற்றில் சில படிநிலை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளன. இவை இல்லாவிட்டால் தொப்புள் கொடி, நோய் எதிர்ப்பு மண்டலம், நரம்பு இழைகளை சுற்றியுள்ள காப்பு ஆகி யவை இருந்திருக்காது. மேலும் மனிதர்கள் வாலுடன் இருந்திருப்போம். இது குறித்து நியூயார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவாளர் போ சியா மற்றும் ஜெஃப் போக்கே குழுவினர் எலிகளில் சோதனை செய்தனர். எலிகள் குரங்குகளைப்போல சாதாரணமான Tbxt மரபணுக்களைக் கொண்டிருக்கின்றன. நீளமான வால்களை யும் பெற்றிருக்கின்றன. அவற்றில் மனிதக் குரங்குகளில் உள்ளது போல் மரபணு மாற் றம் செய்தபோது அவை குட்டையான வால் கள் அல்லது வால்களே இல்லாமல் மாறின. சில எலிகளில் ஸ்பைனல் பிஃபிடா கோளா றும் ஏற்பட்டது. வால் இழப்பிற்கு மேலும் பல மரபணுக்கள் காரணமாக இருக்கலாம் என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். மனித மரபணுத் தொடரில் இருக்கும் இது போன்ற கூறுகள் வேறு பல படிநிலை வளர்ச்சிகளி லும் தாக்கம் செலுத்தியிருக்கலாம். மனிதன் நேராக நின்றதும் இரண்டு கால்களால் நடந்த தும் பல்லாயிரக்கணக்கான ஆண்டு களுக்குப் பின்னர் நிகழ்ந்தது. இது குறித்து இந்த ஆய்வு விளக்கம் அளிக்கவில்லை என்கிறார் ரூசோ என்கிற ஆய்வாளர்.
தூக்கத்திலும் வேலை செய்யும் மூளை
தூக்கத்தில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது உடல் அமைதியாக இருக்கும்போது மூளை மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறதாம். நாம் தூங்கும்போது மூளை செல்கள் உண்டாக்கும் மின் அதிர்வுகள் இணைந்து சீரான அலைகளாகின்றனவாம். இது மூளையிலுள்ள செல்கள் அதிக செயல்பாட்டில் இருப்பதைக் காட்டும் அறிகுறியாகும். நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது மெதுவான மூளை அலைகள் உண்டாகின்றன. இந்த அலைகள் மூளையில் உண்டான கழிவுகளை அகற்ற உதவுகின்றன என்று வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்தவப் பள்ளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தனித்தனியான நரம்பு செல்கள் ஒன்றிணைந்து சீரான அலைகளை உண்டாக்கி மூளையிலுள்ள அடர்ந்த திசுக்களிடையே திரவங்களை செலுத்துகின்றன. இந்த முறையில் அவற்றை சுத்தம் செய்கின்றன. ‘இவை சிறு பம்புகள் போல செயல்படுகின்றன’ என்கிறார் நோயியல் மற்றும் நோய் எதிர்ப்பு இயல் முது நிலை முனைவரும் இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான லி-ஃபெங் ஜியாங் -சி. ‘இந்த ஆய்வை தொடர்ந்தோமானால் அல்செமியர் மற்றும் பார்க்கின்சன் உள்ளிட்ட நரம்புக் கோளாறுகளை தாமப்படுத்தவும் தடுக்கவும் கூட முடியும். இந்தக் கோளாறுகளில் வளர்சிதை மாற்றத்தின் மூலம் ஏற்படும் கழிவுகளும் பயனற்ற புரதங்களும் மூளையில் தேங்கி நரம்பு சிதைவுகளுக்கு இட்டு செல்கின்றன’ என்கிறார் அவர்.