வருடத்திற்கு இரண்டு நாட்கள் நண்பகல் நேரத்தில் பூஜ்ஜிய நிழல் நாள் என்பது நடைபெறும். சூரி யனின் பயணம் உத்தராயணம் தட்சி னாயணம் என இரண்டு திசைகளில் நடைபெறுவது அறிந்ததே. உத்தரம் என்றால் வடக்கு என்று பொருள். அயணம் என்றால் பயணம். சூரியன் வடக்குத் திசையை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கும் நாள் (தை மாதம் முதல் நாள்) உத்தராயண புண்ணிய காலத்தின் தொடக்க நாள் ஆகும். தை முதல் நாள் அன்று தொடங்கும் உத்தராயணம் தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்கள் நீடிக்கிறது. அதாவது, இந்த ஆறு மாதக் காலத்துக்குச் சூரியன் வடக்கு நோக்கிப் பயணிக்கிறார். வட திசை நோக்கிய பயணத்தை நிறைவு செய்து விட்டு, ஆடி மாதம் முதல் நாள் சூரியன் தென்திசை நோக்கிய பயணத்தைத் தொடங்குகி றார். தட்சிணம் என்றால் தெற்கு, அயணம் என்றால் பயணம். ஆடிமாதம் முதல் நாள் தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கும் சூரியன், ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய ஆறு மாதங்களுக்குத் தென்திசையில் பய ணிக்கிறார். எனவே இது தட்சி ணாயண காலமாகும்.
பூஜ்ய நிழல் நாள் (Zero Shadow Day) என்பது நிழல் காண இயலா நாள். அதாவது சூரியன் நேரடியாக நம் வாழும் பகுதிக்கு மேல் சிகர எல்லையில் உள்ள நாள் ஆகும். சூரிய ஒளியினால் உண்டாகக் கூடிய ஒரு பொருளின் நிழலைக் கொண்டு நம்மால் சூரியனின் இயக்கம், சூரிய ஆரம், பூமியின் நேரம், நாம் இருக் கக்கூடிய இடத்தின் அட்சரேகை அமைப்பு ஆகியவற்றை கண்டறிய லாம். பொதுவாக, சூரியனால் உரு வாகும் ஒரு பொருளின் நிழல் சூரிய உதயத்தில் அதிக நீளத்தோடு இருக்கும். இந்த நிழலானது நீளத்தில் குறைந்து கொண்டே வந்து உச்சி வேளையில் மிகக்குறைந்து, பின் மீண்டும் சூரியன் மறையும் வரை வளர்ந்து அதிகமாகிக் கொண்டே செல்லும். ஆனால், ஒரு வருடத்தின் இரண்டு நாட்களில் மட்டும் பொருளின் நிழலானது அப்பொருளுக்கு மிகச் சரியாக கீழே விழுவதால் நம்மால் அப்பொருளின் நிழலை உச்சி மதிய வேளையில் கூட காண இயலாது. ஏப்ரல் 15 சனிக்கிழமையன்று மதுரை ஆண்டாள்புரத்தில் உள்ள அக்ரினி வளாகத்தில் “பூஜ்ஜிய நிழல்” பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. அக்ரினி குடியிருப்பு சங்கமும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பாலர் பூங்கா ஆகிய அமைப்புகள் இணைந்து அக்ரினி வளாகத்தில் உள்ள நிர்மல் பிளாக் மொட்டை மாடியில் பூஜ்ஜிய நிழல் பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் அக்ரினி குடியிருப்பு சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் நாராயணன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக நாராயணசாமி மற்றும் காமேஸ்வரன், பாலர் பூங்கா சார்பாக கோபி ,ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சூரியன், மற்ற கோள்கள் பற்றிய அறி வியல் சிந்தனைகளை எடுத்துக்கூறி னர். பூஜ்ஜிய நிழல் பார்க்கும் நிகழ்வு குழந்தைகளோடு கைகோர்த்து நடைபெற்றது.