tamilnadu

img

ஐம்பொன் சிலைகளை ரூ. 2 கோடிக்கு விற்க முயன்ற இருவர் கைது

கடலூர், ஜூன் 25- விருத்தாச்சலம் அருகே இருப்பை குறிச்சி கிராமத்தில் இரு  பழமையான ஐம் பொன் சிலைகளை விற்க முயன்ற இருவர் கைது செய்யப்பட்ட னர். அவர்களிடமி ருந்து ரூ. 2 கோடி மதிப் பிலான பெருமாள் மற்றும் மாரியம்மன் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே இருப்பைகுறிச்சி கிராமத்தில் இரு பழமையான ஐம்பொன் சிலைகளை இரண்டு கோடி ரூபாய்க்கு வெளிநாட்டில் விற்க முயற்சிப்பதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த சிலைகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது  போல் நடித்து ஒரு அடி உயரமுள்ள மாரி யம்மன் சிலை, ஒன்னேகால் அடி உயர முள்ள பெருமாள் சிலையை சிலை தடுப்பு  பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்த னர். சிலைகளை விற்க முயன்ற இருப்பை குறிச்சியை சேர்ந்த மகிமைதாஸ் மற்றும் பெரிய கோட்டை மேட்டை சேர்ந்த பச்சை முத்து ஆகிய இருவரையும் கைது செய்த னர். கைது செய்யப்பட்ட இருவரையும் சிலை திருட்டு தடுப்பு வழக்கை விசாரிக் கும் கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட இவ்விரு ஐம்பொன் சிலைகளையும் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

;