tamilnadu

“ஒரு குறிப்பிட்ட கட்சியாக என்னை அடையாளப்படுத்தியது தவறான செயல்”

பாஜக அட்டை வழங்கி வளைக்க முயற்சி

ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கியவர் பேட்டி

மதுரை, ஜூன் 1- மதுரையில் சமூக சேவகர் ஒரு வரை பாஜக வளைத்துப்போட முயற்சித்துள்ளது. அவரோ இது அவர்களின் தவறான நடவ டிக்கை என கருத்துத் தெரிவித் துள்ளார். மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வரு பவர் மோகன்  இவர் கொரோனா நோய் தொற்று பரவல் காரண மாக ஊரடங்கு உத்தரவால் அப் பகுதி போதிய வருமானமின்றி தவித்து வந்த நிலையில் தன்னு டைய மகள் நேத்ராவின் படிப்பு மற்றும் அவரது எதிர்கால வாழ் க்கை தேவைக்காக சேர்த்து வைத்திருந்த ரூபாய் 5 லட்சத்தை எடுத்து அப்பகுதி மக்களுக்கு  நிவாரண பொருட்களை வழங்கி யுள்ளார். இது பிரதமர் மோடியின் கவனத்திற்குச் சென்ற நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற மான் கி பாத் நிகழ்ச்சியில் மோகனையும் அவரது குடும்பத்தினரையும் பாராட்டியுள்ளார்.

விஷயம் அவ்வளவு தான்....

இதையடுத்து திங்களன்று அவரது வீட்டைத் தேடி தலை தெறிக்க ஓடிய பாஜகவினர் சிலர். அவரை பாஜக என முத்திரை குத்த முயற்சித்துள்ளனர். அத னொருபகுதியாக அடையாள அட்டையைக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டது. இதுகுறித்து மோகன் கூறு கையில், “கொரோனா ஊர டங்கு காரணமாக  எங்கள் பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு பொருளாதார நெருக்கடியில் இருந்த நிலையில் என்னுடைய மகளின் எதிர்காலத்திற்காக சேர்த்து வைத்த பணத்தை எடுத்து ஒரு மக்களுக்கு நிவா ரணப் பொருட்களை நான் வாங்கிக் கொடுத்தேன். இது சமூகத்திற்கு நான் செய்த சேவை. அவ்வளவு தான். பிரதமரின் கவனத்திற்கு சென்றால் அவர் எங்கள் குடும்பத்தினரை பாராட்டியுள்ளார்.  இந்த நிலையில் “என்னுடைய சமூகசேவையை இவர்கள் இப்படி பயன்படுத்துவார்கள் என்று நினைக்கவில்லை. எனக்கு அனைத்துக்கட்சியிலும்  நண்பர்கள் உள்ளனர். அனைத்து கட்சியினர் தயவும்  எனக்குத் தேவை. என்னை “ஒரு குறிப் பிட்ட கட்சியாக” அடையாளப் படுத்துவது மிகவும் தவறான செயல் என்றார்.