tamilnadu

img

மியான்மர் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் உடலைப் பெறுவதில் சிக்கல்

மணிப்பூர், ஜூலை 10- மணிப்பூர் மாநிலத்தின் மோரேவிலிருந்து  சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் மியான்  மருக்கு மிக அருகில் உள்ள தமு என்ற இடத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பி.மோகன் (27), அய்யனார் (28) ஆகிய இரண்டு இளை ஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர் களை சுட்டுக் கொன்றவர்கள் மியான்மர் ராணுவத்தினருடன் இணைந்து போராடும் குழுக்கள் எனக் கூறப்படுகிறது. மணிப்பூரின் எல்லையில் உள்ள மோரே நகரில் வசித்த இவர்களில் மோகன் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அய்யனார் சிறு  வியாபாரம் செய்துவந்துள்ளார். இவர்கள்  கடந்த ஜூலை 5-ஆம் தேதி நண்பரின் பிறந்த நாள் விருந்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா-மியான்மர் எல்லையில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமு வுக்குச் சென்றுள்ளனர். அங்கு ராணுவத்து டன் இணைந்து போராடும் போராளிக் குழுக்களால் கொல்லப்பட்டனர்.

கிட்டத்தட்ட ஒரு வாரமாகியும் மோகன், அய்யனார் உடல்கள் இன்னும் இந்திய அதி காரிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை. இரு வரின் உடல்கள் எப்போது கிடைக்கும் என்பது தெரியாமல் இருவரது குடும்பங்களும் தவிப்  பில் உள்ளன. மணிப்பூர் எல்லை நகரான மோரேயில் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ள நிலையில் நகர் தமிழ்ச் சங்கம், மணிப்பூர் முதல்வர் மற்றும் தெங்னௌபால் மாவட்டத்தின் துணை ஆணையரைத் தொடர்பு கொண்டு மோகன், அய்யனார் உடல்களைப் பெற முயற்சித்து வருகிறது. இருவரது உடல்களையும் இந்திய  அரசிடம் ஒப்படைக்கக் கோரி அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. மியான்  மரில் சட்டபூர்வ அரசாங்கம் இல்லாத நிலை யில் கடிதம் தமுவில் உள்ள அதிகாரிகளி டம் ஒப்படைக்கப்பட்டதா அல்லது ஒப்ப டைக்கப்படுமா என்பது எங்களுக்குத் தெரிய வில்லை, என்கிறார் பல்வேறு மொழி பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழு வின் உறுப்பினர் ஒருவர்.