காணாமல் போன யுஏஇ தூதரின் கன்மேன் கை நரம்பு அறுபட்ட நிலையில் மீட்பு
திருவனந்தபுரம், ஜூலை 17- திருவனந்தபுரம் யுஏஇ தூதரின் கன்மேனாக பணி யாற்றிய ஜெயகோஷ்கை யில் காயத்துடன் மீட்கப்பட் டார். கை நரம்பு அறுபட்ட நிலையில் காணப்பட்ட அவர் தற்கொலைக்கு முயன்றிக்க லாம் என கருதப்படுகிறது. காவல்துறையினர் அவரை மீட்டு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது தான் தவறு செய்ய வில்லை எனவும், தனக்கு தங்க கடத்தலில் பங்கில்லை எனவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழி யில் ஜெயகோஷ் செய்தியா ளர்களிடம் கூறினார். வியாழனன்று இரவு ஏழரை மணிக்கு பிறகு ஜெகோஷை காணவில்லை என குடும்பத்தினர் தேடினர். தொடர்ந்து காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். அவரை தேடி வந்த நிலை யில் வீட்டின் அருகில் உள்ள புதரிலிருந்து வெள்ளியன்று மீட்கப்பட்டார். தங்க கடத்தல் வழக்கில சொப்னா சுரேஷின் செல் பேசி பதிவுகளில் ஜெயகோ ஷின் பெயர் இடம்பெற்றி ருந்தது. இத்தகவல் வெளி யான பிறகு யுஏஇஅட்டாசே யும் இந்தியாவை விட்டு வெளியேறிய நிலையில் அவர் மன அழுத்தத்துக்கு உள்ளானதாகவும் தகவல் உள்ளது. ஜெயகோஷின் வீட்டுக்கு வந்து இருவர் மிரட்டிச் சென்றதாகவும் குடும்பத்தினர் புகார் தெரி வித்திருந்தனர்.
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சாலைப் பணிகள்: மாநகராட்சி ஆணையருக்கு சிபிஎம் வலியுறுத்தல்
தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரே நேரத்தில் 4 பிரதான சாலைகளில் பணிகளை மேற்கொள்ளா மல் ஒவ்வாரு சாலையாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் ரோடுகள் அமைப்பதற்காக அண்ணா நகர் மெயின் ரோடு, திருச்செந்தூர் பிரதான சாலை, ஜெயராஜ் ரோடு, விஇ ரோடு ஆகிய ரோடுகளில் வேலைகள் துவங்கி 8 மாதங்களுக்கு குறையாமல் ஆகும் என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒரே நேரத்தில் நகரின் பிரதான சாலைகள் தோண்டப்பட்டு வேலை நடப்பது பொதுமக்களுக்கு பெரும் சிரமங்களை உருவாக்கும். தற்போது ஊடரங்கு தளர்வுகள் மேலும் தளர்த்தப்பட்டு பெரும்பாலும் ஆகஸ்டில் பொதுப் போக்குவரத்தும், பள்ளி கல்லூரிகளும் திறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய சூழலில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் அன்றாடம் கடும் சிரமங்களை அனுபவிக்கும் சூழல் உருவாகும். மேலும் விபத்துக்களும் அதிகமாகலாம். இது சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள ரோடு வேலைகள் முடிந்த பிறகு அடுத்த கட்ட ரோடு வேலைகளை எடுக்கவும். மேற்கண்ட 4 ரோடுகளும் பிரதான போக்குவரத்திற் கான ரோடுகளாக இருப்பதால் எவ்வ ளவு முடியுமோ அவ்வளவு விரைவாக வேலைகளை முடித்திடவும் வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.
வாகனச் சோதனையில் துப்பாக்கியுடன் 3 பேர் கைது
தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி மாவட்டம் தொட்டி லோவன்பட்டி சோதனைச் சாவடி யில் கோவில்பட்டி கிழக்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது ஈரோட்டிலிருந்து தச்ச நல்லூர் சென்ற ஒரு காரை சோதனை செய்ததில், அந்த காரில் திரு நெல்வேலி தச்சநல்லூர் மேலக்க ரை, அம்மன்கோவில் தெருவைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜ்குமார் என்ற குமுளி ராஜ்குமார் (37). இவ ருடன் பாளையங்கோட்டை படம குறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வினோத் (26) மற்றும் கொக்கி ரக்குளம் மேலநத்தத்தை சேர்ந்த சுரேந்தர் (24) ஆகிய மூவர் இருந்த னர். இவர்கள் கடந்த 13ம் தேதி இ-பாஸ் பெற்றுக் கொண்டு தச்ச நல்லூரிலிருந்து ஈரோடு சென்றதும், அங்கிருந்து திரும்பி வருவதும் தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில் ராஜ்குமார் இடுப்பில் கைத்துப்பாக்கி, 5 குண்டு கள் வைத்திருந்ததும், அவருடன் இருந்த மற்ற இருவரிடம் 2 அரிவாள் இருந்ததும் தெரிந்தது. அவர்கள் 3 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த ஒரு துப்பாக்கி, 5 குண்டுகள், 2 அரிவாள்கள், 5 செல் போன்கள் மற்றும் அவர்கள் பயன் படுத்திய கார் ஆகியவற்றை போலீ சார் கைப்பற்றினர். ராஜ்குமார் மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் 26 வழக்கு கள் உள்ளன.
ஸ்பிக் நிறுவன கேஸ் பைப்லைன் பணி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள்
தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், ஸ்பிக் நிறுவனத்திற்கு கேஸ் பைப் லைன் கொண்டு செல்வது தொடர்பாக பொட்டல்காடு கிராம மக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலை மையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு வழியாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்பிக் நிறுவனத்திற்கு கேஸ் பைப் லைன் கொண்டு செல்வதற்கான பணி இறுதி கட்டத்தில் உள்ளது. தற்போது பொட்டல் காடு கிராம பகுதியில் கேஸ் பைப்லைன் அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. பொதுமக்களுக்கு பிரச்ச னைகள் ஏற்படாத வகையிலும், அவர்களது பாதுகாப்பு கருத்தில் கொண்டு பைப்லைன் பணி நடைபெறுகிறது. எனினும் மக்களின் கருத்துகளை பரிசிலனை செய்யும் விதமாக தற்காலிகமாக சில தினங்களுக்கு குழாய் பதிக்கும் பணி நிறுத்தப்படுகிறது. பைப்லைன் கொண்டு செல்வதற்கு மாற்றுப்பாதை பயன் படுத்த முடியுமா என்பதை ஆராய திட்ட மிடப்பட்டு உள்ளது. பொட்டல்காடு கிராமத்தில் இருந்து கேஸ் பைப்லைன் தள்ளி போடுவது தொடர்பாகவும் ஆரா யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் அமைதி காத்திடுமாறும், மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வரை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் காவல் நிலையத்தில் போலீ சாரால் கடுமையாக தாக்கப்பட்ட தந்தை, மகன் உயிரிழந்த விவகா ரம் நாடு முழுவதும் கடும் அதிர்வலை களை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரு கிறது. இந்நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை யும் விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராஜாராமன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “தந்தை- மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை தொடங்கும் முன்னரே அவர்கள் உடல் நிலை கோளாறு காரணமாக உயிரிழந்ததாக முதலமைச்சர் முன்னுக்குபின் முரணாக பேசிய தாக மனுதாரர் கூறியிருந்தார். மேலும், முதலமைச்சரின் பேச்சு குற்ற வாளிகளை காப்பாற்றும் செய லாகக் கருதி கொலை வழக்கில் முதல மைச்சருக்கு தொடர்பு உள்ளதா? என்பதை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த வழக்கு வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் முதல் வரை விசாரிக்கும்படி உத்தரவிட முடியாது எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு நிவாரண உதவி வழங்கல்
தூத்துக்குடி, ஜூலை 17- தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில், திருச்செந்தூர் வட்டம் இந்திரா நகர் கல்விளை மெஞ்ஞானபுரம் கிராமத்தை சேர்ந்த கொலையுண்டு இறந்த சிறுமி முத்தாறு என்பவரின் தாயார் உச்சிமாகாளி என்பவரிடம் வன்கொடுமை தடுப்பு தீருதவி முதல் தவணை தொகையாக ரூ.4,12,500 காசோலையினையும், இலவச வீட்டு மனை பட்டாக்கான உத்தரவினையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெள்ளியன்று வழங்கினார். மேலும் குற்றவாளிகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாதந்தோறும் ஒய்வூதியமாக ரூ.5,000 மற்றும் அகவிலைப்படியுடன் சேர்த்து வழங்கப்படும், பசுமை வீடு கட்டி தர நடவடிக்கை எடுக்கப்படும், கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுமியின் தாயாரிடமும், உறவினர்களிடமும் ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஆறுதல் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார், திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.