tamilnadu

img

பாஜகவை முற்றிலுமாக அப்புறப்படுத்திட மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்

அகர்தலா, ஜன.28- நாள்தோறும் உயரும் விலைவாசி, மக்களின் வாழ்வாதாரங்கள் நாளும் நாளும் நசிந்துகொண்டிருப்பது, வேலை யின்மை, சுகாதார நலம், கல்வி, பாதுகாப்  பான குடிநீர், மின்சாரம், வீட்டு வசதி என  எதைப்பற்றியும் கவலைப்படாது, கடந்த  ஐந்தாண்டு காலமாக ஆட்சி செய்து வந்த  பாஜகவை முற்றிலுமாக அப்புறப்படுத்  திட மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார் கள். இந்தத் தடவை தேர்தல் ஆணையம்,  திரிபுரா மாநில சட்டமன்றத்திற்கு பிப்ர வரி 16 அன்றும், மேகாலயா மற்றும் நாகா லாந்து சட்டமன்றங்களுக்கு பிப்ரவரி 27 என்றும் நிர்ணயித்திருக்கிறது. இதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.

மோட்டார் பைக் குண்டர்கள்

ஜனவரி 11 அன்று இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முழுக் குழு ஒன்று (full team) திரிபுராவிற்கு விஜயம் செய்தது. தேர்தல் நடத்துவதற்கான நிர்வாக வேலைகளை ஆய்வு செய்ததுடன், ஆணையம் அனைத்து அரசியல் கட்சி களையும் தனித்தனியே சந்தித்தது. ஆளும் பாஜக தவிர மற்ற அனைத்துக்  கட்சிகளுமே, பாஜக-வினால் வெளிமாநி லங்களிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ள மோட்டார் பைக் குண்டர் கும்பல்களின் அடாவடித்தனமான நடவடிக்கை களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளன.  உண்  மையிலேயே இந்தியத் தேர்தல் ஆணை யம் மாநிலத்தில் தேர்தலை நியாயமாக வும் நேர்மையாகவும் நடத்த வேண்டு மென்று விரும்பினால் இதனைச் செய்திட வேண்டும், இல்லையேல் அதற்கு தேர்  தல் நடத்துவது மிகப்பெரிய சவாலாக மாறிவிடும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தேர்தல் ஆணையத்தின் முன் மார்க்சிஸ்ட் கட்சி மனு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தின் முன்  அளிக்கப்பட்டுள்ள மனுவில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் உட்பட அனைத்துத் தேர்தல்களிலும், எதிர்க்கட்சி யினரை வாக்களிக்க விடாமல் தடுத்தும், குண்டர் கும்பல்களின் அடாவடித்தனங்க ளைத் தடுத்திட காவல்துறையினர் முன்  வராதிருந்ததையும், கூறி அவை எந்த  அளவுக்குக் கேலிக்கூத்தான முறையில்  நடந்தன என்று சுட்டிக்காட்டப்பட்டிருந் தது. இடது முன்னணி ஆட்சிக்காலத்தில் தேர்தல் என்றால் மக்கள் மத்தியில் திரு விழா மன நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால் பாஜக ஆட்சிக்காலத்தில் அது அச்ச மூட்டும் நிகழ்வாக மாறிவிட்டது. திரிபுராவில் உள்ள நிலைமையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென் றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநில செயலர் ஜிதேந்திர சௌத்ரி,  இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கூறி யதைப்போன்று, அகர்தலாவிலிருந்து இரண்டு வாகனங்களை செங்கொடிகளு டன் வடக்கே ஒன்றையும், தெற்கே ஒன்  றையும் சுமார் 15 கிலோ மீட்டத் தூரத்  திற்கு அனுப்பி வையுங்கள். அவை எவ்  வித சேதமுமின்றி திரும்பி வந்துவிட்டால், நாங்கள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக இருக்கிறது எனக் கூறி, மோட்  டார் பைக் குண்டர் கும்பல்கள் குறித்து  தேர்தல் ஆணையத்திற்குக் கொடுத் துள்ள மனுவை நாங்கள் திரும்பப் பெற்றுக்கொள்கிறோம் என்றார். எனி னும் தேர்தல் ஆணையம் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவிற்கு, தேர்  தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திட அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தி ருக்கிறது.

புத்துணர்வூட்டிய கூட்டியக்கம்

ஜனவரி 22 அன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,  அகில இந்திய பார்வர்ட் பிளாக், புரட்சி  சோசலிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட்  (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சி, காங்கி ரஸ் கட்சி முதலானவை தங்கள் கட்சிக் கொடிகளுடன், “எங்கள் வாக்கு  எங்கள் உரிமை” என்ற முழக்கத்துடன் பேரணியாக, சென்று, இந்தியத் தலைமை  ஆணையத்தைச் சந்தித்துள்ள னர். இந்தப் பேரணிக்கு திரிபுராவின் முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் தலைமை வகித்தார்.   இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சி களின் கூட்டு இயக்கம் மக்கள் மத்தியில் புத்துணர்வை ஊட்டி இருக்கிறது. தேர்தல் அறிவித்தபின்னர், மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் காங்கிரஸ்  கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் உள்ள  60 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி 43, காங்கிரஸ் 13, இந்தியக்  கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் மற்றும் புரட்சி சோச லிஸ்ட் கட்சி தலா 1 எனப் போட்டியிடு வதாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இடதுசாரிக் கட்சிகள்-காங்கிரசுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர்  ஆளும் பாஜக ஆட்டம் கண்டிருப்பது நன்கு தெரிகிறது. இடதுசாரிக் கட்சிகள்- காங்கிரஸ் ஒப்பந்தத்தின்படி வேட்பா ளர்கள் பெயர்களும் அறிவிக்கப்பட்டு விட்டன.

குறையாத தாக்குதல்கள்

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துவிட்டபோதிலும், பாஜக கும்பல் குண்டர்களின் தாக்குதல்கள், தீ வைப்பு,  கட்சி அலுவலகங்களை இடித்தல், எதிர்க்  கட்சி ஆதரவாளர்கள் மீது தாக்குதல்கள் குறையவே இல்லை. முன்பு போல தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.  எனினும் சில இடங்களில் தேர்தல் ஆணை யத்தின் எச்சரிக்கைக்குப் பயந்து கும்பல் குண்டர்கள் தங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டுள்ளனர். பாஜக பல மாநிலங்களிலிருந்து ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்  களை வரவழைத்திருக்கிறது. இவற்றை அது தன்னுடைய அடியாட்களிடம் அளித்துள்ளது. எனினும் கடந்த ஐந்தாண்டு காலமாக தங்கள் வாழ்க்கையில் எவ்வித உரிமை யும் அளிக்கப்படாது, வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு, நிலைகுலைந்து போயுள்ள மக்கள், பாஜக-விற்கு மரண  அடி கொடுப்பதற்காகக் காத்துக் கொண்  டிருக்கிறார்கள். அகர்தலாவிலிருந்து ஹரிபாத தாஸ்