tamilnadu

img

சிபிஎம் ஸ்தாபகத் தலைவர் தோழர் பி.ராமமூர்த்தி சிலைக்கு மரியாதை

மதுரை, டிச. 15-  சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும்  சிஐடியு ஸ்தாபகத் தலைவர் களில் ஒருவருமான தோழர் பி. ராமமூர்த்தி அவர்க ளின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 15 வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்டது. மதுரை தெப்பக்குளம் அருகில் உள்ள பி.ராம மூர்த்தி சிலைக்கு  சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் இரா. லெனின் தலைமையில் மாலையணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்டத் தலை வர் இரா. தெய்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் அரவிந்தன், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், புறநகர்  மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தி னர்.  இதைத்தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், முன்னாள் புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பாலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், ஜா. நரசிம்மன், எம். பாலசுப்பிரமணியம், சிஐடியு புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன், பொருளா ளர் கௌரி, மாநகர் பொருளாளர் ஜே. லூர்து ரூபி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு சங்கத்தினர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி யின் தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின் நன்றி கூறினார்.