tamilnadu

img

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

கேரள மக்களின் கள நாயகர்
 

சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

கண்ணூரில் நாளை இறுதி நிகழ்ச்சி

சென்னை, அக்.1- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மகத்தான தலைவர்களில் ஒருவரும், அரசியல் தலைமைக் குழு உறுப்பின ரும், கேரள மக்களின் நாயகர்களில் ஒரு வருமான கோடியேரி பாலகிருஷ்ணன் சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் சனிக்கிழமை இரவு 830 மணியள வில் காலமானார். அவருக்கு வயது 69. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் பல ஆண்டுகளாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.  ஆகஸ்ட் 29 அன்று நோய் பாதிப்பு முற்றிய நிலையில், மேல் சிகிச்சைக்காக திரு வனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார் 

என்ற துயரச் செய்தி, கேரளம், தமிழகம் மட்டு மல்ல, நாடு முழுவதும் உள்ள இடதுசாரி இயக்க  தோழர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் மாணவ பருவம் முதலே கேரளத்தின் வீரஞ்செறிந்த போராளிகளில் ஒருவராவார். கண்ணூர் மாவட்டம் கோடியேரி கிராமத்தில் பிறந்த அவர், இந்திய மாணவர் சங்கத்தின் தலைவ ராக தனது அரசியல் வாழ்வை துவக்கினார். 1973 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் பல்கலைக்  கழக கல்லூரியில் பி.ஏ. படித்துக் கொண்டிருந்த  போது, இந்திய மாணவர் சங்கத்தின் கேரள  மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்

கண்ணூர் மாவட்டத்தில் மதவெறியர்களால் திட்டமிடப்பட்டு கலவரங்கள் நடத்தப்பட்ட போது, அந்த பிரதேசம் முழுவதும் தீவிரமாக செயல்பட்டு மதநல்லிணக்கத்தையும் மக்கள்  ஒற்றுமையையும் பேணி பாதுகாத்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்களில் முதன்மை யானவர் கோடியேரி பாலகிருஷ்ணன். மாணவப் பருவத்தில் கட்சியின் கிளைச் செயலாளர் பொறுப்பில் துவங்கி, கோடியேரி பகுதிச் செய லாளர், வாலிபர் சங்கத்தின் கண்ணூர் மாவட்டச் செயலாளர், கட்சியின் கண்ணூர் மாவட்டச் செயலாளர் என படிப்படியாக உயர்ந்து, 1988 கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராகவும், 1995 இல் மாநில செயற்குழு உறுப்பினராக வும், 2008 இல் அரசியல் தலைமைக் குழு உறுப்பி னராகவும் உயர்ந்த தோழர் கோடியேரி, 2015 இல் கட்சியின் கேரள மாநிலச் செயலாள ராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அப்பொறுப்பில் செயலாற்றிய கோடியேரி, 2020 இல் கடும் உடல்நலக் குறைவு காரணமாக  சிகிச்சையின் பொருட்டு அப்பொறுப்பிலிருந்து ஓராண்டு காலம் விடுவிக்கப்பட்டார். அச்சம யத்தில் கேரள மாநில பொறுப்புச் செயலாள ராக ஏ.விஜயராகவன் செயலாற்றினார். மீண்டும் 2022 இல் நடைபெற்ற மாநில மாநாட்டில் செயலா ளராக தேர்வு செய்யப்பட்டார். எனினும், உடல்நிலை மோசமடைந்த நிலையில், 2022 ஆகஸ்ட்டில் செயலாளர் பொறுப்பிலிருந்து கோடியேரி பாலகிருஷ்ணன் விடுவிக்கப்பட்டு, எம்.வி.கோவிந்தன் மாஸ்டர் மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்தே கோடியேரி, சென்னை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

கேரளத்து மக்களின் நலன் காக்கவும், நாடு  முழுவதும் உள்ள பாட்டாளி மக்களின் நலன்  காக்கவும், வர்க்கப் போராட்டத்தின் முன்னணி தளபதிகளில் ஒருவராக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியை வழிநடத்தியவர் தோழர் கோடி யேரி பாலகிருஷ்ணன், அவசர நிலை காலத்தின் ஆள் தூக்கி சட்டமான மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, காவல்துறையின் கடும் சித்ரவதைக்கு உள்ளானவர் அவர். சட்டமன்றத்திலும் தனி முத்திரை பதித்த வர் கோடியேரி. 1982 இல் முதல்முறையாக தலசேரி தொகுதியிலிருந்து கேரள சட்டமன்றத்  திற்கு தேர்வு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து 1987, 2001, 2006, 2011 தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று உள்துறை அமைச்சராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வர் நேரில் அஞ்சலி

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் காலமான  செய்தியறிந்து, உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா உள்ளிட்டோர் விரைந்தனர். திருவனந்தபுரத்திற்கு உடனடியாக தக வல் அளிக்கப்பட்டு, அங்கிருந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கோவிந்தன் மாஸ்டர் சுமார்  10.30 மணியளவில் சென்னை வந்தடைந்து, மருத்துவமனைக்கு வந்து தோழர் கோடியேரி யின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனிடையே தகவல் அறிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இரவு 10.30 மணியள வில் மருத்துவமனைக்கு நேரில் வந்து தோழர்  கோடியேரி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். எம்.வி.கோவிந்தன், கே.பாலகிருஷ்ணன் ஆகிய தலைவர்களிடம் தமது இதயப்பூர்வமான ஆறுதல்களை தெரிவித்தார்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குறிப்பில், “சிபிஐ(எம்) தலைமைக் குழு உறுப்பி னரும், 3 முறை அக்கட்சியின் கேரள மாநிலச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தினேன். கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர்  கோடியேரி பாலகிருஷ்ணன் அவர்கள், 1975 ஆம் ஆண்டு நெருக்கடி நிலையின்போது, மிசா சட்டத்தின் கீழ் சிறை தண்டனை அனு பவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை இழுந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக் கும் எனது இதயப்பூர்வமான இரங்கலை தெரி வித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள் ளார்.

கண்ணூரில் இன்று இறுதி நிகழ்ச்சி

தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உடல்  இரவு கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஞாயிறன்று (இன்று) கண்ணூர் பாயம்பாலம் கடற்கரையில் மாலை 3 மணியளவில் அவ ரது இறுதி நிகழ்ச்சி நடைபெறுகிறது.